ஷாருக்கான் மேல் அதிருப்தி! நயன்தாரா திடீர் ஷாக்!
ஷாருக்கான் மேல் நயன்தாரா அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
HIGHLIGHTS
ஜவான் படத்தில் ஷாருக் கான் ஜோடியாக நடித்தால் பெரிய ஆதாயம் கிடைக்கும் என நம்பி நயன்தாரா ஏமாந்து போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜவான் படத்துக்கு நயன்தாராவுக்கு பதில் பாலிவுட் ஹீரோயின் ஒருவரை பயன்படுத்தியிருக்கலாம் என பாலிவுட் தயாரிப்பாளர்கள் பலர் கருத்து தெரிவித்து வருவதால் நயன்தாரா அதிர்ச்சியடைந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ், தெலுங்கு மொழி சினிமாவில் தனது ருத்ரதாண்டவத்தை ஆடிக் காட்டிய நயன்தாரா தென்னிந்தியாவின் அசைக்க முடியாத நடிகையாக இருந்து வந்தார். அவரைக் கேட்டு படத்தின் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ண தெலுங்கு தயாரிப்பாளர்களே லைனில் நிற்பார்கள் என்று பேசப்பட்ட காலமும் உண்டு.
திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்டு கமிட் ஆன அனைத்து படங்களையும் நடித்து முடித்துவிட்டு, சில நாயகி முன்னிலை படங்களையும் ஒப்பந்தம் செய்துவிட்டு காத்திருந்த நயன்தாராவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அவரைத் தேடி எந்த தயாரிப்பாளரும் வரவில்லை என்பது.
ஒரு சிலர் வந்தாலும் நயன்தாரா கேட்கும் தொகையைக் கேட்டு பின்னங்கால் பிடதியில் அடிக்க ஓடியதாக கூறுவார்கள். இன்னும் சிலரோ நயன்தாராவை அம்மா கதாபாத்திரத்தில் அக்காவாக நடிக்கும்படி கேட்டு வந்தார்களாம். இப்படி எல்லா படத்தையும் கழித்துக் கொண்டே வந்ததால் நயன்தாரா மார்க்கெட் நாளுக்கு நாள் சரிவைத் தொடங்கியது.
இது என்ன பிஸ்கோத்து படம், நமக்கு ஷாருக்கானோட ஜவான் 2 வருசமா காத்திருக்கு என அதில் மும்முரமாக நடித்து கொடுத்த வீட்டில் காத்திருந்தார். ரிலீஸ் நாளன்றும் மிகவும் எதிர்பார்ப்பில் ஹிந்தி பட தயாரிப்பாளர்கள் அழைப்பார்கள் என அமர்ந்திருந்தாராம் நயன்தாரா. முதல் நாள் சிலர் கூப்பிட்டு நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டனராம். ஆனால் அடுத்தடுத்து தயாரிப்பாளர்கள் லைனில் நிற்பார்கள் நமக்கு 4,5 படங்கள் அடுத்தடுத்து ஹிந்தியில் தேறும் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்கிறார்கள்.
குறைந்தது ஷாருக்கானாவது அடுத்த படங்களில் தன்னை ஹீரோயினாக கமிட் செய்வார் என்று எதிர்பார்த்தாராம். ஆனால் அவர் பை பை சொல்லிவிட்டு போனதோடு சரி திரும்பி அழைக்கவே இல்லையாம்.
ஜவான் திரைப்படத்திலேயே வேறு பாலிவுட் நடிகையை போட்டிருக்கலாமே என ஷாருக்கானுக்கு போனுக்கு மேல் போன் வந்துகொண்டிருக்கிறதாம். நயன்தாரா நன்றாக நடித்தாலும்கூட அவரது அட்ராக்ஷன் இப்போது ரசிகர்களுக்கு திருப்தியாக இல்லை என்று தயாரிப்பாளர்கள் உணர்ந்துள்ளார்கள் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.
அடுத்து சொந்த படம் தயாரித்தால் மட்டுமே அவர் ஹீரோயினாக நடிப்பார் என்று பரவலாக பேசப்படுகிறது. முன்னதாக அஜித் ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க அழுத்தம் கொடுத்த காரணத்தினால் லைகா தரப்பிலிருந்து விக்னேஷ் சிவனை வம்படியாக வெளியேற்றி விட்டதாக தகவல் பரவியதும் குறிப்பிடத்தக்கது.