/* */

எனக்கு படத்துலயும் இல்ல நிஜத்திலயும் இல்ல... துணிவாக பேசிய சிம்பு!

முன்னாடில்லாம் 'நான் யாருனு தெரியுமாடானுங்குற அளவுக்கு பேசியிருக்கேன். ஒத்துக்குறேன். அப்ப நிறைய கஷ்டத்தில் இருந்தேன். இனி நான் சினிமாவில் இருக்கமாட்டேன்; என் கதை முடிந்துவிட்டதுனு பேசுனாங்க.

HIGHLIGHTS

எனக்கு படத்துலயும் இல்ல நிஜத்திலயும் இல்ல... துணிவாக பேசிய சிம்பு!
X

எனக்கு படத்திலேயும் ஜோடி இல்லை, நிஜத்திலேயும் ஜோடி இல்லை என்று கூறி சிம்பு தனது ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இதனை ஜாலியாக அவர் கூறியது ஒருபுறம் இருந்தாலும் இது பலருக்கும் வருத்தத்தை தருகிறது. இப்போது வரை இவரை புரிந்துகொண்டு மணக்க ஆள் இல்லையே என்று பல ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

தமிழ் சினிமா இயக்குநர்களைப் பற்றி பேசினால் அதில் டி ராஜேந்தர் பற்றி பேசாமல் இருந்துவிட முடியாது. அப்படி ஒரு இயக்குநர் தனது மகனை சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வைத்து அவனை அனைத்து திறமைகளையும் சினிமா நோக்கியே வளர்த்து விட்டார். அவர்தான் லிட்டில் சூப்பர் ஸ்டார் யங் சூப்பர் ஸ்டார் என்று வந்த சிம்பு. இப்போது ஆட்மேன் எனும் அடைமொழியிட்டு வரும் சிம்பு அடுத்து நடித்து வெளியாகும் படம் பத்து தல.


ஓபிலி கிருஷ்ணா இயக்கி சிம்பு, கௌதம் கார்த்திக், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லாஞ்ச் நேற்று சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் சிம்பு பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நான் இங்கே வரும்போது ஒரு விசயம் தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அது இந்த நிகழ்ச்சியில் அழுது விடக் கூடாது என்பது. அது மட்டும் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். படங்களில் சின்ன செண்டிமென்ட் காட்சி வந்தால்கூட அழுதுவிடுவேன். ஆனா உங்களுக்காக தான் இன்னிக்கு அழக்கூடாதுனு நினைத்தேன். ஏன்னா நாம நிறைய கஷ்டங்களை பார்த்துட்டோம். இனிமே சந்தோஷமாக இருக்கணும்.


இந்தப் படம் ஆரம்பிச்ச கதை ஒன்னு இருக்கு. இந்தப் படம் ஆரம்பிச்சப்ப கஷ்டமான சூழ்நிலையில இருந்தேன். அப்ப ஞானவேல் ராஜா 'நான் வீட்டுக்குள்ளேயே இருக்கேன் வெளிய வரமாட்டேன்னு சொன்னார். சில நாள் கழிச்சி அவரே திரும்ப என்ன கூப்பிட்டு இந்தப் படத்தை பண்ணலாம்னு சொன்னாரு.

இந்தப் படத்த கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடித்திருப்பார். அவர் அங்கே ஒரு சூப்பர் ஸ்டார். அவர் கதாபாத்திரத்தில் நான் எப்படி நடிக்க முடியும்னு தயங்கினேன். அதையும் தாண்டி இந்தப் படத்த ஒத்துக் கொண்டதற்கு காரணம் கௌதம் தான். சின்ன படம், பெரிய படம்னு எதுவா இருந்தாலும் எனக்கு பிடிச்சிருந்தா அந்தப் படத்தில் நடித்தவர்களை கூப்பிட்டு பாராட்டும் பழக்கம் எனக்குண்டு. ஏன்னா இங்க தட்டி விடுவதுக்கு நிறைய பேர் இருக்காங்க. ஆனா தட்டி கொடுக்க யாரும் இல்லை.


எனக்கு தட்டிக்கொடுக்க என் ரசிகர்கள் மட்டும்தான் இருக்காங்க. கௌதம் கார்த்திக் ஒரு நல்ல பையன். தங்கமான பையன். அந்த பையன் நிறைய பிரச்னைகள சந்திச்சிதான் இந்த இடத்துக்கு வந்திருக்காரு. எனக்கு இந்தப் படம் வெற்றிப்படமா அமையுதோ இல்லையோ, அவருக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையணும். கெளதமிற்காக மட்டுமே இந்தப் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும்னு நினச்சேன்.


ஏஆர் ரஹ்மான் சார் என் காட்ஃபாதர். ஒரு சிஷ்யனாக அவருக்கு என் மேலே உள்ள அன்பை காப்பாற்றுவேன். ஆன்மிகம் வழியிலும் அவர் எனக்கு குருவாக இருந்திருக்காரு.

எல்லோரும் என்கிட்ட, 'முன்னாடி உங்க பேச்சில் ஒரு எனர்ஜி இருக்கும். இப்போல்லாம் சாஃப்டா பேசுறீங்கனு கேட்கிறாங்க. அதுக்கு ஒரு காரணம் இருக்கு.

முன்னாடில்லாம் 'நான் யாருனு தெரியுமாடானுங்குற அளவுக்கு பேசியிருக்கேன். ஒத்துக்குறேன். அப்ப நிறைய கஷ்டத்தில் இருந்தேன். இனி நான் சினிமாவில் இருக்கமாட்டேன்; என் கதை முடிந்துவிட்டதுனு பேசுனாங்க.


அந்த நேரத்தில் நான் மட்டும் தான் எனக்கு துணையாக இருந்தேன். அதனால தான் அப்படி கத்தி பேசுவதுலாம் நடந்துச்சு. மாநாடு படத்தை கொண்டாடி, வெந்து தணிந்தது காடு படத்தில் என் நடிப்பை பாராட்டி, இதோ இப்போது இந்த மேடையில் கொண்டுவந்து என்னை நிறுத்திருக்கீங்க. அப்புறம் எப்படி கத்தி பேச முடியும் பணிந்து தான் பேச முடியும்.

இனி பெரிதாக பேசுறதுக்கெல்லாம் ஒன்னும் இல்ல; செயல் மட்டும்தான். இனிமே ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கலாம். மத்தத நான் பார்த்துக்குறேன். இனிமே நான் என்ன பண்ணுறேங்குறத மட்டும் பாருங்க. சாதாரணமாக வரல. வேற மாதிரி வந்துருக்கேன். இனிமே உங்கள தல குனிய விடமாட்டேன். இவ்வாறு சிம்பு பேசினார்.

முன்னதாக, இந்த படத்தில் எனக்கு ஜோடி இல்லை. படத்திலும் இல்லை நிஜத்திலும் இல்லை என்று கூறியிருந்தார்.

Updated On: 19 March 2023 8:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  3. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  4. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  5. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  6. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  9. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...