இன்னும் 'நெறைய்ய்...யா' எதிர்பார்க்கிறோம் - பிக்பாஸ் ரசிகர்களுக்கு 'சூடு பத்தல'
GP Muthu Bigg Boss 6 Tamil- பிக்பாஸ் நிகழ்ச்சியில், பரபரப்பான காட்சிகள் எதிர்பார்த்த அளவில் இல்லாதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
HIGHLIGHTS
GP Muthu Bigg Boss 6 Tamil-பிக்பாஸ் 6 நிகழ்ச்சி துவங்கி 11 நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில், இன்றைய முதல் ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில் கதை சொல்லும் டாஸ்க்கில் பலரும், கதை சொல்லி அழுததை காட்டி தப்பிக்கப் போவது யார்? என்கிறார் பிக்பாஸ்.
ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது:
'ப்ரொமோ' ரொம்பவும் மொக்கையாக இருக்கிறது. எதிர்பார்த்த அளவில் பரபரப்பாக, விறுவிறுப்பாக காட்சிகள் இல்லை. பத்தல, பத்தல. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். சக போட்டியாளர்களுக்கு விக்ரமன் மீது ஏன் இவ்வளவு கோபம் என தெரியவில்லை. ரொம்பவும் மோசம். விஜே கதிர், 'சைலன்ட் கில்லர்' ஆக தெரிகிறார். மற்றவரை பேசவிடாமல் தடுக்க, பஸ்ஸரை தட்ட அதிக வேகம் காட்டுகிறார். விக்ரமனுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். அசல் ஒரு சைக்கோ போல தெரிகிறார். அவரை வெளியே அனுப்புங்கள், என்ற கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.
டாஸ்க்கில் பேசக்கூடாது என்பதற்காக, பஸ்ஸரையும் அழுத்துகிறார்கள், கையும் தட்டுகிறார்கள். யாருய்யா நீங்க?' என்று ஜி.பி. முத்து கேட்பது தான் மிகவும் சரி என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறப் போவது யார் என்பதை தெரிந்து கொள்ளவும் பார்வையாளர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
வார இறுதி நாட்களில் வரும், கமல்ஹாசன் அந்த அசல் கோலாரை 'லெப்ட் அன்ட் ரைட்' விட வேண்டும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். குவின்ஸியின் கையை அசல் தடவிக் கொண்டே இருந்ததை, பிக்பாஸ் கண்டிக்காதது பார்வையாளர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை, வாக்குவாதங்களும், சண்டைகளும், ஒருவருக்கு ஒருவர் கோள் மூட்டி விடுவதும், நண்பர்களாக இருந்துகொண்டே எதிரிகளாக நடந்துகொள்வதும்தான், எதிரிகளாக இருந்தும், நண்பர்களாக போலியாக பழகுவதும்தான், இந்நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கும். வாரந்தோறும் சனி, ஞாயிறு தினங்களில் வரும் கமல்ஹாசனும் பஞ்சாயத்து தலைவராக இருந்து, பிரச்னைகளுக்கு இன்னும் கொம்பு சீவிவிட்டு செல்வார். அப்போதுதான், போட்டியாளர்களுக்குள் உண்மையான போட்டி ஏற்படும். அவர்களது சுயத்தன்மை வெளிப்படும். பாசாங்கு இல்லாமல், வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து போட்டிகளில் பங்கு பெறுவார்கள். இதில் உண்மையான திறமைசாலிகள் வெற்றி பெறுவார்கள் என்பது பிக்பாஸ் போடும் கணக்கு.
ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பலரும், கேமரா கண்காணிப்பதால் தங்களது சுய உருவத்தை காட்டாமல், நடித்தும், நைசாக பேசியும் பார்வையாளர்களை மட்டுமின்றி, சக போட்டியாளர்களையும் ஏமாற்றி விடுகின்றனர். ஆனால், இந்தமுறை வந்தவர்களில், ஜி.பி முத்துவிடம், அத்தகைய நடிப்பு, பாசாங்கு இதுவரை இல்லை. யதார்த்தமானவராக தெரிகிறார். உண்மைாக பேசுகிறார். நல்லவிதமாக நடந்துகொள்கிறார் என்கின்றனர் ஒரு தரப்பினர்.
பத்து நாட்கள்தானே கடந்திருக்கிறது. இன்னும் போக போக பார்த்தால்தான் அவரது உண்மை முகமும் தெரிய வரும் என்கின்றனர் மற்றொரு தரப்பினர். இதற்கு வரும் நாட்களில் பதில் தெரிந்துவிடும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2