அந்த நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்த கையோட மரணமடைந்த 3 நடிகர்கள்! விஜய் டிவி நிகழ்ச்சி சென்டிமென்ட்!
அந்த நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்த கையோட மரணமடைந்த 3 நடிகர்கள்! விஜய் டிவி நிகழ்ச்சி சென்டிமென்ட்!
HIGHLIGHTS
எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து இயக்குநர் ஜி மாரிமுத்து மரணமடைந்ததை அடுத்து அவரைப் பற்றி பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
மாரிமுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜோதிடத்துக்கு எதிரான கருத்து ஒன்றை தெரிவிக்க தமிழகமே பத்திக் கொண்டு எரிந்தது. அவர் ஜோதிடம் எனும் மூட நம்பிக்கைக்கு எதிராக பேசியதை பாராட்டித் தள்ளினர் பலரும். இந்நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியிலும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
எதிர்நீச்சல் தொடர் மிகவும் சிறப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வேளையில் விஜய் தொலைக்காட்சியிலிருந்து மாரிமுத்துவுக்கு தூது அனுப்பியிருக்கிறார்கள். விஜய் டிவிக்கு வந்துவிடும்படியும் 2 மடங்கு சம்பளம் தருவோம் என்றும் கூறப்பட்டதாக தகவல். ஆனால் ஒப்பந்தப்படி வேறு தொலைக்காட்சிக்கு சீரியல் நடித்து கொடுக்கமுடியாது என்று மறுத்துவிட்டாராம் மாரிமுத்து.
அப்போது ரியாலிட்டி நிகழ்ச்சியிலாவது பங்கேற்று செல்லுங்கள் என்று சொல்ல, விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சி முழுக்க கலகலப்பாக, சிறப்பாக நடைபெற்றது. மாரிமுத்துவும் தனது இயல்பான ஸ்லாங்கில் பேசி மகிழ்ந்து சிறப்பாக பாடல்கள் பாடி ஆடி குதூகலப்படுத்தினார். அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் மரணமடைந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.
இதற்கு காரணம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர் எஸ் சிவாஜி கடந்த வாரம் மரணமடைந்தார். அவர் கமல்ஹாசனின் உயிர்த்தோழர். அவருடன் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் முக்கிய பணியில் இருந்தவர். அவரது மறைவுக்கு முன்னதாக மாரிமுத்து கலந்து கொண்டே அதே நிகழ்ச்சியில் அதே நாளில் கலந்து கொண்டிருந்தார் ஆர் எஸ் சிவாஜி.
இவர்கள் இருவர் மட்டுமல்ல ஏற்கனவே விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் முல்லையாக நடித்த வி ஜே சித்ராவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பி தற்கொலை செய்து கொண்டார் என்கிறார்கள். இப்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு உயிரிழந்த 3 நடிகர்களால் இது சிலருக்கு ராசி இல்லாத நிகழ்ச்சி என சமூக வலைத்தளங்களில் பேச ஆரம்பித்துவிட்டனர்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பேசப்படும் விசயங்களை உணர்த்ததானே தவிர, ஜோதிடம், சாபம் உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் பதிவல்ல. அதேநேரம் இது பலரது நம்பிக்கைகளைச் சார்ந்தது என்பதையும் அதனால் அதுகுறித்து எந்த கருத்தையும் நாங்கள் தெரிவிக்கவில்லை.