முதல் நாள் காட்சி லெஜண்ட்காக… லெஜண்ட் கடையில் வாங்குன எக்ஸ்ட்ரா கட்டப்பைக்காக..!
'தி லெஜண்ட்' படம் குறித்த கலவையான விமர்சனங்களில், சீரியல் நடிகை சரண்யாவின் முகநூல் விமர்சனம் வைரலாகியுள்ளது.
HIGHLIGHTS
கோலிவுட் வட்டாரத்தின் கடந்த ஒரு வார கால ஹாட் டாபிக் லெஜண்ட் திரைப்படமே. லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன உரிமையாளர் அருள் சரவணன் நடித்த இந்த திரைப்படம் நேற்று வெளியாகியது. முன்னணி நடிகர்களின் திரைப்படங்களைப் போலவே அதிகாலை 4 மணி காட்சிகள் எல்லாம் திரையிடப்பட்டது.
பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிய லெஜண்ட் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பன்மொழிப் படமாக வெளியிடப்பட்டது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும், படம் பார்த்த ரசிகர்கள் மத்தியிலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களை அளித்து வந்தபோது, திரைப்பிரபலங்கள் பாராட்டி பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், சீரியல் நடிகை ஒருவர் லெஜண்ட் படத்தை கிண்டல் செய்து பதிவிட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆம். அந்தப் பிரபல சீரியல் நடிகை சரண்யா. இவருக்கென்று சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், "முதல் நாள் காட்சி லெஜண்ட்காக… லெஜண்ட் கடையில் வாங்குன எக்ஸ்ட்ரா கட்டப்பைக்காக" என்று பதிவிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவுதான் தற்போது கோலிவுட் பிரபலங்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட லெஜண்ட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வந்தது.
படத்திற்கு ஒளிப்பதிவு வேல்ராஜ், இசை ஹாரிஸ் ஜெயராஜ், டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் என்று படத்தில் பணியாற்றிய எல்லோருமே தமிழ்த்திரையுலகின் பிரபல கலைஞர்கள். நடிகை லதா, நடிகர் விஜயகுமார், நடிகர் பிரபு, மறைந்த நடிகர் விவேக் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமும் இப்படத்தில் பங்கேற்றுள்ளனர். படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் படத்தை காண ரசிகர்களும் ஆவலுடன் இருந்தனர். இந்தநிலையில், நேற்று வெளியான இந்தத் திரைப்படத்தின் அருள் சரவணனின் நடிப்பு குறித்தும் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், லெஜண்ட் பிரமாண்டம் வியப்புதான் என்ற பேச்சு பலமாகத்தான் ஒலிக்கிறது.