/* */

எஸ்கேஆர் வீட்டில் தத்தெடுக்கப்பட்ட ஜனனி? என்னங்க சொல்றீங்க?

குணசேகரனோ ஜனனியை எஸ்கேஆர் குடும்பத்தில் தத்து எடுத்துவிட்டார்கள் போல என்று கிண்டல் அடிக்கிறான். எஸ்கேஆர் தம்பி அரசு ஏன் தப்பா.. ஜனனியோட சிந்தனைகளும் எங்க குடும்பத்தோட ஒத்துப்போகுது. அப்ப எங்க குடும்பத்துல தத்து எடுத்தா தப்பா என்பது போல கேட்கிறான். இதிலே இந்த புரோமோ முடிவடைகிறது.

HIGHLIGHTS

எஸ்கேஆர் வீட்டில் தத்தெடுக்கப்பட்ட ஜனனி? என்னங்க சொல்றீங்க?
X

இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 22th March 2023

காலில் அடிபட்ட பிறகு ஈஸ்வரிக்கு தன்னை நிரூபித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு வருகிறது. அது தன் மகன் படிக்கும் கல்லூரியில் பேசும் வாய்ப்பு. இதனால் ஈஸ்வரி தான் யார் என்பதை தனக்கே நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அவளுக்கோ குணசேகரனை நினைத்து பயம்.

வீட்டில் வேறு ஏதோ சொல்லிவிட்டு கல்லூரிக்கு செல்கிறாள். அங்கு அவளது மகனுக்கு ஏதோ பிரச்னை எனவும் அதற்காக கல்லூரிக்கு சென்றிருப்பதாகவும் குணசேகரன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் உண்மையை மகனிடம் ஃபோன் செய்து தெரிந்துகொள்கிறான். இதனால் கோபத்தில் இருக்கிறான் குணசேகரன்.

ஈஸ்வரி பயத்தில் ஜனனிக்கு கால் செய்து பேசுகிறாள். ஆனால் ஜனனி நீங்க இப்ப பயந்து ஓடி வந்துட்டீங்கன்னா இனி எப்பவுமே உங்கள நீங்க வெறுக்க ஆரம்பிச்சுடுவீங்க. திரும்ப நாலு செவத்துக்குள்ள முட்டிட்டு நிக்க போறீங்களா என்ன? உங்க முடிவு நீங்களே எடுங்க என்று கூறி அழைப்பை துண்டித்து விடுகிறாள்.

இதனை குணசேகரன் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால் எதுவும் பேசாமல் இருந்துவிடுகிறான். தங்கை ஆதிரையிடம் உடை தேர்ந்தெடுக்க சொல்கிறான் குணசேகரன். அப்போது அவள் மாப்பிள்ளை வீட்டு சார்பாக ஜனனி அண்ணியே எடுக்கட்டும் என்று கூறுகிறாள்.

குணசேகரனோ ஜனனியை எஸ்கேஆர் குடும்பத்தில் தத்து எடுத்துவிட்டார்கள் போல என்று கிண்டல் அடிக்கிறான். எஸ்கேஆர் தம்பி அரசு ஏன் தப்பா.. ஜனனியோட சிந்தனைகளும் எங்க குடும்பத்தோட ஒத்துப்போகுது. அப்ப எங்க குடும்பத்துல தத்து எடுத்தா தப்பா என்பது போல கேட்கிறான். இதிலே இந்த புரோமோ முடிவடைகிறது.

முந்தைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 21st March 2023

தொடர் அவமானங்களைச் சந்தித்தாலும் பரவாயில்லை என்று கூறி எஸ் கே ஆர் வீட்டுக்கு சம்பந்தம் பேச செல்கிறான் குணசேகரன். எஸ்கே ஆர் வீட்டில் குணசேகரனுக்கு எதிர்பார்த்தபடியே அவமானங்கள் நிகழ்கின்றன. ஆனால் தான் போட்ட கணக்கு சரியாக இருக்கும் என அதை பொறுத்துக் கொள்கிறான் குணசேகரன்.

எஸ்கேஆரின் தம்பி அரசு ஜனனியை வைத்து புது திட்டம் ஒன்றை தீட்டுகிறான்.

ஆதிரைக்கு அருணுடன் திருமணம் செய்து வைக்க அனைவரது முன்பு சம்மதம் தெரிவித்த குணசேகரன் தனியாக வேறொரு திட்டம் தீட்டுகிறான். அப்பத்தாவும் 40 சதவிகிதத்தை தருவதாக கூறிவிட்ட வேறொரு திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறார். இப்படி ஒருத்தருக்கு தெரியாமல் ஒருத்தர் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தாம்பூலத் தட்டு மாற்றவேண்டும் என அப்பத்தா கூறியதால் எஸ்கேஆர் வீட்டுக்கு தானே செல்கிறான் குணசேகரன். அவனதுடன் ஜனனியும் செல்கிறாள்.

எஸ்கேஆர் வீட்டுக்கு போயி நாள் குறிச்சிட்டு வரேன் என்கிறான் குணசேகரன். அங்கு சென்று கொண்டிருக்கும்போதே அரசு குணசேகரனை அவமானப்படுத்திகிறான். முன்னாடி குணசேகரன் செய்த விசயங்களை நக்கலாக சொல்லி காட்டுகிறான்.

வீட்டுக்கு சென்ற குணசேகரன் அங்கு எஸ் கே ஆர் உக்காந்து இருப்பதைப் பார்த்து உடனே முதலாளி என்று கூப்பிட்டு அருகே செல்கிறான். வணக்கம் முதலாளி எப்படி இருக்கீங்க என்று கேட்க அதற்கு எஸ்கேஆர் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார். பின்னர் குணசேகரன் கேரக்டரைக் குத்தி காண்பித்து பேசுகிறார்.

குணசேகரா எனக்கு உன்னோடு சம்மந்தம் வைத்துக் கொள்ள துளி அளவும் விருப்பம் இல்லை. அதனால உன் தங்கச்சி இங்க வந்தாலும் நல்ல படியா சந்தோஷமாக இருப்பாலானு தெரியாது. நா இந்த தாம்பூல தட்டை வாங்க மாட்டேன். வேற யாரும் வாங்குனா தடுக்கவும் மாட்டேன் என்று எஸ்கேஆர் கூற, அவரின் தம்பி அரசுவிடம் தாம்பூலத்தை வாங்க சொல்லி கேட்கிறான் குணசேகரன். அதற்கு அரசு தங்கள் வீட்டில் பெண்கள் யாரும் இப்போது இல்லையே. ஜனனி எங்க வீட்டு பொண்ணு மாதிரிதான அவங்களே வாங்கட்டும் என்று சொல்கிறான்

குணசேகரனும் ஜனனியிடம் தாம்பூலத்தைத் தந்துவிட்டு கிளம்புகிறான்.

ஜனனியும் குணசேகரனும் காரில் சென்றுகொண்டிருக்கிறார்கள். தங்கள் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது ஜனனிக்கு திடீரென ஒரு அழைப்பு வருகிறது. போனை எடுத்து பேசியவளுக்கு அதிர்ச்சி. இதை குணசேகரனிடம் கூற அவன் எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஈகோவில் இருக்கிறான். ஜனனியோ காரை நிறுத்துங்கள் என்று கூறிவிட்டு காரைவிட்டு இறங்குகிறாள்.

வீட்டில் குணசேகரன் வந்து அமர்ந்ததும் அப்பத்தா அவனிடம் கேட்கிறாள். போன காரியம் நல்லபடியா முடிஞ்சிதா என்பது போல கேட்டதற்கு அதுலாம் நல்லபடியா முடிஞ்சிது என்கிறான். உடனே ஜனனியைத் தேடுகிறார்கள். ஜனனி எங்கே இருக்கிறாள் அவளைக் காணவில்லையே என்று கேட்கிறார்கள். உடனே குணசேகரன் நடந்ததைக் கூறுகிறான்.

ஈஸ்வரிக்கு ஏதோ ஆகிவிட்டது போல. அதனால் பதறியடித்து போகிறாள் ஜனனி. மருத்துவமனையிலிந்து அவன் மகன் ஃபோன் செய்தும் தனது மனைவிக்கு இப்படி ஆனது தெரிந்தும் எந்த கவலையுமின்றி இருக்கிறான் குணசேகரன்.

Updated On: 22 March 2023 7:49 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...