/* */

Ethir Neechal சிக்கித் தவிக்கும் கரிகாலன்! ஜனனியை மிரட்டும் கௌதம்! இப்படி ஒரு டிவிஸ்ட்டா?

ஆதிரையின் டிவிஸ்ட்டால் திணறிக்கொண்டிருக்கும் கரிகாலன் அதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறான்

HIGHLIGHTS

Ethir Neechal சிக்கித் தவிக்கும் கரிகாலன்!  ஜனனியை மிரட்டும் கௌதம்! இப்படி ஒரு டிவிஸ்ட்டா?
X

எதிர் நீச்சல் இன்றைய புரோமோ | Ethir neechal serial promo

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 15th July 2023

முதல் இரவுக்கு மறுநாள் காலையிலேயே கரிகாலன் கடுப்பாக அமர்ந்திருக்க குணசேகரனும், ஞானசேகரனும் அவனிடம் ஏன் என விசாரிக்கின்றனர். அவன் வாயைத் திறந்து உண்மையை சொல்ல வரும்போது ஏற்கனவே முதலிரவு குறித்து எக்குத்தப்பாக கேட்டது நினைவுக்கு வர அதனை அப்படியே கட் செய்துவிட்டு, குடும்பத்து பிரச்னையை பேச ஆரம்பிக்கிறார்கள்.

வீட்டுக்கு விருந்தாளியா வந்திருக்கான் இந்த குடும்பத்து மாப்பிள்ளை அவனுக்கு கறி சோறு போட முடியாம இருக்கேன். விருந்து சமைக்க சொன்னா அது இதுனு காரணத்த அடுக்கிட்டு ஓடிட்டே இருக்காளுக என மருமகள்கள் குறித்து கடிந்து கொள்கிறான் குணசேகரன்.


இரவில் கரிகாலன் அவனது அம்மா ஜான்சி ராணிக்கு ஃபோன் போட்டு நடந்ததை சொல்லலாம் என்றால் அவள் வேறொன்றைப் புரிந்து கொண்டு பாதாம் பிஸ்தா என வகை வகையாக வாங்கி வந்திருக்கிறாள். இதைப் பார்த்ததும் நான்கு நாட்களாக நாக்கை பட்னி போட்ட கரிகாலன் சும்மா பிரிச்சி மேய்கிறான். நீதான் களைப்பா இருப்ப என்று சொல்ல அவன் நடந்ததை நினைத்து வருந்திக் கொள்கிறான்.


சக்தியும் ஜனனியும் கௌதமை சந்திக்கிறார்கள். இது கௌதம் அவர்களை அழைத்திருப்பதால் நிகழ்ந்த சந்திப்பாக இருக்ககூடும். அவர்களிடம் கௌதம் இனி சொத்து விசயங்களைப் பார்க்காதீர்கள். உங்களுக்கு சம்பந்தமில்லாத விசயம் விட்டுவிடுங்கள் என பேசுவது அவர்களை மிரட்டுவது போல தெரிகிறது. ஆனால் ஜனனி தெளிவாக முடியாது கௌதம் என்று சொல்லிவிடுகிறாள்.

எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 14th July 2023

இடம் : முதலிரவு அறை

நபர்கள் : ஆதிரை, கரிகாலன்

கரிகாலன் வெகு சீக்கிரமாகவே முதலிரவு நடக்கும் அலங்கரிக்கப்பட்ட அறைக்கு வந்துவிடுகிறான். அங்கு நல்ல அலங்காரம் செய்யப்பட்டு வாசனையாக இருப்பதை உணர்ந்து அக்காங்க பரவால சூப்பரா அரேஞ்ச் பண்ணிட்டாங்க. என்னதான் திட்டிட்டே இருந்தாலும் இந்த விசயத்துல பாராட்டிதான் ஆகணும் என்று அறையை சுற்றி சுற்றி வருகிறான் கரிகாலன். பின் அங்குள்ள கட்டிலில் அமர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்து இனிப்புகளை சாப்பிட்ட மெய்மறந்து சுவைத்து சாப்பிடுகிறான். இதுலாம் மாமா தான் வாங்கி வச்சிருப்பாரு நம்ம டேஸ்ட் தெரிஞ்ச ஒரே ஆளு அவருதான் என்று புகழ்கிறான்.

ஆதிரை அப்போது அங்கு கதவைத் திறந்து உள்ளே வர, கரிகாலனுக்கு குஷி தாங்க முடியவில்லை. அவள் கட்டிலில் அமர்ந்து கரிகாலனையும் இங்க வாங்க என்று கூப்பிட்டதை அவனால் நம்ப முடியவில்லை. உடனே அருகில் வந்து அமர்ந்தவனை கொஞ்சம் தள்ளி உட்காரச் சொல்கிறாள் ஆதிரை. அப்போது அவன் ஏன் என்று கேட்க, தள்ளி உக்கார வைக்கிறாள். பின் தனக்கு கரிகாலனை பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்கையில் கரிகாலனுக்கு அழுகையாக வருகிறது.


அவள் தனக்கும் அருணுக்கும் எல்லாம் முடிந்துவிட்டது என்பதை சொல்ல வரும் முன்பே அதனை புரிந்துகொண்டு தன் வாழ்க்கை இப்படி ஆயிடிச்சே என்று அழத்தொடங்குகிறான். நான் பாவம் இல்லையா என்று கேட்கிறான் கரிகாலன்.

கொஞ்சம் பொறுமையாக பேசத் துவங்கிய ஆதிரை, பின் அவன் கெஞ்சிக்கொண்டே இருந்ததால் கோபப்பட்டு பக்கத்து அறையில் போயி தூங்கு என்று சொல்லிவிட, வேறு வழியில்லாமல் குழந்தை போல அழுதுகொண்டே செல்கிறான் கரிகாலன். அவனைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது. கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்துகொண்டே, அந்த அறையில் போய் தூங்கச் செல்கிறான். தலையணையில் தன் மொபைலை மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வர, அதனை எடுத்து தன் தாய்க்கு ஃபோன் செய்கிறான்.

இடம் : குணசேகரன் வீட்டு அறை - ஃபோன் கால் - ஜான்சி ராணி வீடு

நபர்கள் : கரிகாலன், ஜான்சி ராணி

அம்மா தூங்கிருக்குமோ என யோசித்துக் கொண்டே ஜான்சி ராணிக்கு ஃபோன் செய்கிறான் கரிகாலன். அவள் ஃபோனை எடுத்து என்னடா இந்த நேரத்துல கூப்பிட்டுருக்க, அந்த அரிச்சந்திரன் (குணசேகரன்) இன்னிக்கே பர்ஸ்ட் நைட்டு ஏற்பாடு பண்ணிடுவேன்னு சொன்னான்.. என்னாச்சு என்ன நடக்குது அங்க என்று கேட்க, அவன் அழுது கொண்டே எல்லாம் முடிஞ்சிடுச்சிம்மா என்கிறான்.


இதனை அவள் முதலிரவு முடிந்துவிட்டதாக நினைத்து சந்தோஷப்படுகிறாள். அடுத்து அவன் பேச வருவதற்குள் இவளே பல விசயங்களைப் பேச, கரிகாலன் வேறு வழியின்றி நடந்ததை சொல்லமுடியாமல் ஏதேதோ பேசுகிறான். அதை உணர்ந்த ஜான்சிராணி என்ன என்று கேட்க அதற்கு களைப்பாக இருக்கு, இட்லியும் தோசையும் சாப்பிட்டா அப்படித்தான் இருக்கும்னு சொல்ல, ஜான்சி ராணி கோபப்படுகிறாள்.

நான் அங்க வந்து அந்த காட்டு காட்டியும் இன்னும் இட்லிதான் சுட்டு தந்துட்டு இருக்காளுகளா வரேன் நாளைக்கு, அவளுக வச்சிக்கிறேன்னு சொல்லி அழைப்பைத் துண்டிக்கிறாள்.

இடம் : குணசேகரன் வீட்டு சமையலறை

நபர்கள் : நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா, ஜனனி


நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா மூவரும் சமையலறையிலிருந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன இவரு சமயக்கட்ட பூட்டாம போயிட்டாரு என்று ரேணுகா கேட்க, ஏதோ அவசரத்துல மறந்துட்டாரு என குணசேகரனைப் பற்றி சொல்கிறாள் நந்தினி. என்ன இவ சட்டுன்னு ஒத்துக்கிட்டா, என ஆதிரை குறித்து பேசுகையில், ஈஸ்வரி அவள் ஏதோ ஸ்ட்ராங்கான திட்டம் வச்சிருக்கா இல்லன்னா இதுக்கு ஒத்துக்கிட்ருக்க மாட்டா என்கிறாள்.

ரேணுகாவும் நந்தினியும் வழக்கம்போல பல விசயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் ரேணுகாவுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அதற்காக ஜனனியையும் அழைத்து நான்குபேரும் பேசுகிறார்கள்.

ஜனனி ஜீவானந்தம் புகைப்படத்தைக் காண்பித்து இவர் குணசேகரனின் ஆள் (அவர்தான் ஜீவானந்தம் என்று தெரியாமல்) என்றும் அப்பத்தா சொத்த மொத்தமா ஆட்டய போட குணசேகரன் திட்டம் போடுறார்னும் சொல்லி பகீர் கிளப்புகிறாள். ஆனால் ஆதிரை விசயத்தில் அசந்தது போல இதில் சும்மா விட்டுவிட மாட்டேன் நிச்சயமாக குணசேகரனை வீழ்த்தி காண்பிக்கிறேன் என்கிறாள் ஜனனி.

இடம் : குணசேகரன் வீடு

நபர்கள் : கரிகாலன், நந்தினி, குணசேகரன், ஞானசேகரன், ஜான்சி ராணி

காலையில் எழுந்து வந்து டைனிங் அறையில் அமர்ந்திருக்கிறான் கரிகாலன். நந்தினி காப்பி கொண்டு வர சூட்டோடு சூடாக அதை அப்படியே ஒரே வாயில் குடிக்கிறான். இதனால் நந்தினி அவனிடம் என்ன என்று கேட்கிறாள். உங்க மாமா மாதிரி ஆயிரத்தெட்டு குறை சொல்லுவியே இப்ப என்னடா இப்படி குடிக்குற எதுவும் சொல்லாம என்று கேட்க, அந்த நேரத்தில் குணசேகரன் அங்கு வருகிறான். நந்தினி அடுப்பாங்கரைக்கு போய்விடுகிறாள்.

குணசேகரனுடன் ஞானசேகரனும் வந்து அமர, கரிகாலனிடம் ஏன் சோகமாக இருக்க என்று கேட்கிறான். அதற்கு கரிகாலன் நேத்து என ஆரம்பிக்க அட இவன் எக்குத்தப்பா எதையாச்சும் சொல்லிடபோறான் என குணசேகரன் முந்திக்கொண்டு நேத்து வியாழக்கிழமை இன்னிக்கு வெள்ளிக்கிழம என்று சொல்ல, கரிகாலன் இவர்களிடமும் எதுவும் பேச முடியாது என அமைதியாகிறான்.


மாப்பிள்ளை தன் வீட்டுக்கு விருந்துக்கு வந்தும் அவனுக்கு கறிசோறு போட முடியல என பொறுமிக்கொண்டே, நந்தினியிடம் இன்னிக்கு இவனுக்கு கறிசோறு போட்டே ஆகணும் என்கிறான். ஆனால் சஷ்டி, பிரதோசம்னு பாத்துட்டுதான் சொல்லமுடியும் மாமா என்கிறாள். அதனால் கொஞ்சம் கடுப்பான குணசேகரன் வாயை திறப்பதற்குள் நந்தினி முந்திக்கொண்டு இன்னும் 1 நாள் இருக்கு மாமா என்கிறாள். குணசேகரன் ஏதோ திட்டம் வைத்திருக்கிறான்

ஜான்சி ராணி தன் தங்கையுடன் பையில் பல பொருட்களை அள்ளிப் போட்டு எடுத்துக் கொண்டு வருகிறாள். அம்மாவைப் பார்த்ததும் கரிகாலனுக்கு தொலைந்து போன மகிழ்ச்சி திரும்பிக் கிடைக்கிறது.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 16th July 2023

விரைவில் அப்டேட் செய்யப்படும்

Updated On: 15 July 2023 9:48 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?