/* */

குணசேகரனுக்கு நேர்ந்த அவமானம்! ஜீவானந்தம் பக்கம் சாயும் கௌதம்!

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடரின் நாளைய எபிசோடில் குணசேகரனுக்கும் ஜீவானந்தத்துக்கும் சம்பந்தம் ஏற்படப்போகிறது.

HIGHLIGHTS

குணசேகரனுக்கு நேர்ந்த அவமானம்! ஜீவானந்தம் பக்கம் சாயும் கௌதம்!
X

எதிர் நீச்சல் இன்றைய புரோமோ | Ethir neechal serial promo

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 13th July 2023

கரிகாலனை அடிக்கப் பாய்ந்த குணசேகரனின் மகள் பிரிய தர்ஷினியால் குடும்பத்தில் மீண்டும் சண்டை உருவாகிறது. இதற்கெல்லாம் சித்திகள்தான் காரணம் என குணசேகரனின் கோபம் குடும்பத்து மருமகள்கள் மேல் விழுகிறது. இதனையடுத்து குணசேகரன் தனக்கான காலம் வரும் வரை காத்திருந்து இவர்களை அடக்க வேற வழியைத் தேடி அமைதியாக இருக்கிறான்.

இடம் : குணசேகரன் வீட்டு மாடி

நபர்கள்: குணசேகரன், ஞானசேகரன், கரிகாலன்

கரிகாலன் தனது முதலிரவு குறித்து பேசிக்கொண்டிருக்கிறான். குணசேகரன் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி குறித்தும் கதிர் குறித்தும் பேசுகிறான்.

ஞானசேகரன் கரிகாலன் குணசேகரன் ஏற்பாடுகளை செய்தார்களா என பார்க்க கீழே செல்கிறார்கள்

பொம்பளைங்கள அடக்கி வைக்க வேண்டும் என்று கரிகாலனுக்கு சொல்லிக் கொடுக்கிறான். கரிகாலனோ ஆதிரை மேல் காதல் இருப்பதால் நான் இப்படி இருக்கிறேன் என்று காதல் வசம் பேச, பெரிய காதல் ரோமியோ ஜூலியட் காதல் என கேலி செய்கிறான் குணசேகரன். பின் நந்தினி, ரேணுகாவைப் பற்றி பேச்சு எழுகிறது.

நந்தினி என்ன நக்கல் பண்ணிட்டு இருக்கா. அது எனக்கு புரியும்னு அவளுக்கே தெரியுது அப்றமும் அத வேணும்னே பண்ணிட்டு இருக்கா. ரேணுகா பக்தி பழமாட்டும் இருந்தா ஆனா பண்ணுற வேலைகள்ல ஜான்சி ராணி தோத்துடுவா அப்படி பேசுறா என்னத்த பண்ண அமைதியா போயிட்டு இருக்கேன். பல்லு இல்லாத சிங்கம் என்ன பண்ணிடும்னு பொம்பளைங்கல்லாம் என்ன சீண்டு பாத்தாங்கன்னு வையி அத்தோட நேரா பாஞ்சி கழுத்த கடிச்சிடுவேன் என பேசிக்கொண்டே இருக்கும்போது கரிகாலன் மீண்டும் குறுக்கிட்டு வாங்க மாமா கீழே போவோம் என்கிறான்.

இடம் : குணசேகரன் வீட்டு சமையல் அறை

நபர்கள் : நந்தினி ரேணுகா ஆதிரை ஜனனி

ஆதிரை முதலிரவு குறித்தும் அருணிடம் பேச வேண்டும் எனவும் கேட்கிறாள்

அந்த நேரத்தில் குணசேகரன் வருகிறார்

ஆதிரை - அரிவாள் மனை - சண்டை

ஆதிரை முதலிரவுக்கு சம்மதிக்கிறாள்

சமையல் அறையில் ஆதிரை, ஜனனி, நந்தினி, ரேணுகா நால்வரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அருணைத் தான் சந்தித்து பேச வேண்டும் என்று கேட்கிறாள் ஆதிரை. ஆனால் மற்றவர்கள் அது எப்படி இப்ப முடியும் என யோசிக்கின்றனர். அடுத்து என்ன செய்ய வேண்டும் என ஆதிரை தான் முடிவு செய்யவேண்டும் என கூறுகிறாள் ஜனனி. தனக்கு அருணை சந்தித்து பேசினால்தான் அடுத்து என்ன செய்ய முடியும் என முடிவு எடுக்கத் தோணும் என்று கூறுகிறாள்.

அந்த நேரம் பார்த்து குணசேகரனும் கரிகாலனும் அடுப்படிக்குள் நுழைகிறார்கள். உடன் ஞானசேகரனும் வருகிறான். அங்கு நடப்பவற்றைப் பார்த்து தனது வழக்கமான குரலை கர்ஜிப்பது போல செய்ய, அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். ஜனனியைப் பார்த்து நீ ஏன் இங்க வந்த என்ன பண்ணிட்டு இருக்க. உன் புருசனை கையெழுத்த போட வுடலல.. அவன் இந்த சொத்தே வேண்டாம்னுட்டான்ல அப்றம் உங்களுக்கு இங்க என்ன வேலை. கொம்பு சீவி விடுறியலா என கோபத்தில் கேட்கிறான். பின் நந்தினி, ரேணுகாவை பார்த்து இன்னும் சடங்குக்கு ஏற்பாடு பண்ணலயா. நீங்கதானம்மா பண்ணனும் அதான மொற என்று கேட்க, நந்தினி பண்ண முடியாது மாமா. இது ஆதிரையோட வாழ்க்கை அது அவதான் முடிவு பண்ணனும் என்று சொல்ல, ஆதிரையும் எனக்கு இதில் விருப்பம் இல்லை என்கிறாள்.

குணசேகரன் ஆதிரையை கொன்றுவிடுவேன் என்று மிரட்ட உனக்கு அறுத்து போடணும் தானே இந்தா என அரிவாள்மனையை எடுத்து வெட்டிக் கொள்ள போகிறாள். அப்போது நந்தினியும் ரேணுகாவும் அவளைத் தடுத்து நிறுத்த, உனக்கு நான் சரிகிடையாது இங்க வந்து இவளுக பேச்ச கேட்டு திமிரெடுத்து ஆடுறியா..இரு எப்ப கரிகாலா நீ வீட்டுக்கு கூட்டிட்டு போ.. நா உங்கம்மாட்ட பேசிக்கிறேன். ஜான்சி ராணி தான் சரி. அங்க இருக்கிற வர ஒழுங்காதான இருந்த என்று பேசி தரதரவென ஆதிரையை இழுத்துக் கொண்டே போக அவள் சம்மதிக்கிறேன் இதுக்கு ஒத்துக்குறேன் என்று சொல்லிவிடுகிறாள்.

இடம் - ஜீவானந்தம் வீட்டு மாந்தோட்ட பகுதி

நபர்கள் - ஜீவா, பர்ஹனா இன்னொரு பெண்

கௌதம் குறித்த உரையாடல்.

கௌதம் வந்து தன் தோழிதான் ஜனனி என கூறியதும் சமூக நீதி, தாங்கள் செய்யும் செயல்கள் என்ன என கொஞ்சம் தெளிவாக விளக்கிய பிறகு கௌதம் ஜீவானந்தம் பக்கமே நிற்க சம்மதிப்பதாகவும், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறிவிட்டு சென்றதிலிருந்து பர்ஹானாவுக்கும் அருகிலுள்ள மற்றொரு பெண்ணுக்கு கௌதமை பிடிக்கவில்லை. அதற்கு அவர்கள் சந்தித்த கௌதம் மாதிரியான இளைஞர்கள் காரணமாக இருக்கலாம் என்று எண்ணும் ஜீவானந்தம் கௌதமால் நமக்கு எந்த பிரச்னையும் வராது அவர் நமக்கு உதவிதான் செய்வார் என்று ஆணித்தரமாக கூறுகிறார்.

ரொம்ப யோசிக்க வேண்டாம் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்திவிடுகிறான் ஜீவானந்தம்.

இடம் : முதலிரவு அறை

நபர்கள் : ஆதிரை கரிகாலன்

கரிகாலன் வெகு சீக்கிரமாகவே முதலிரவு நடக்கும் அலங்கரிக்கப்பட்ட அறைக்கு வந்துவிடுகிறான். அங்கு நல்ல அலங்காரம் செய்யப்பட்டு வாசனையாக இருப்பதை உணர்ந்து அக்காங்க பரவால சூப்பரா அரேஞ்ச் பண்ணிட்டாங்க. என்னதான் திட்டிட்டே இருந்தாலும் இந்த விசயத்துல பாராட்டிதான் ஆகணும் என்று அறையை சுற்றி சுற்றி வருகிறான் கரிகாலன். பின் அங்குள்ள கட்டிலில் அமர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்து இனிப்புகளை சாப்பிட்ட மெய்மறந்து சுவைத்து சாப்பிடுகிறான். இதுலாம் மாமா தான் வாங்கி வச்சிருப்பாரு நம்ம டேஸ்ட் தெரிஞ்ச ஒரே ஆளு அவருதான் என்று புகழ்கிறான்.

ஆதிரை அப்போது அங்கு கதவைத் திறந்து உள்ளே வர, கரிகாலனுக்கு குஷி தாங்க முடியவில்லை. அவள் கட்டிலில் அமர்ந்து கரிகாலனையும் இங்க வாங்க என்று கூப்பிட்டதை அவனால் நம்ப முடியவில்லை. உடனே அருகில் வந்து அமர்ந்தவனை கொஞ்சம் தள்ளி உட்காரச் சொல்கிறாள் ஆதிரை. அப்போது அவன் ஏன் என்று கேட்க, தள்ளி உக்கார வைக்கிறாள். பின் தனக்கு கரிகாலனை பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்கையில் கரிகாலனுக்கு அழுகையாக வருகிறது.

அவள் தனக்கும் அருணுக்கும் எல்லாம் முடிந்துவிட்டது என்பதை சொல்ல வரும் முன்பே அதனை புரிந்துகொண்டு தன் வாழ்க்கை இப்படி ஆயிடிச்சே என்று அழத்தொடங்குகிறான்.

எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 12th July 2023

நந்தினி சமைத்த இட்லியை பற்றி கிண்டல் செய்கிறான் குணசேகரன். இதை தின்றோம் என்றால் பல்லு கில்லுலாம் உடஞ்சு தூளாகிவிடும் எனக்கு இட்லி வேண்டாம் என்கிறான் குணசேகரன். ரோட்டு கடைலயே சூப்பரா இட்லி சுடுறான் மல்லிப்பூ மாதிரி. இங்க நீங்க சுட்ட இட்லிய கான்கிரிட் மிக்ஸர் மிஷின்ல போட்டுதான்மா எடுத்துட்டு வரணும்.

ஏம்பா ஞானம் நீ எக்ஸர்சைஸ் பண்றேல கம்பியெல்லாம் தூக்கிட்டு அதுக்கு பதிலா இனி இட்லிய தூக்கி பண்ணு அதுக்குதான் லாயக்கு எனும்படியாக கூறுகிறான் இதனால் நந்தினி கொஞ்சம் சலித்துக் கொள்கிறாள். அந்த பக்கம் திரும்பிக் கொண்ட நந்தினியிடம் சோற்றைப் போட்டு கொஞ்சம் தயிரை ஊத்து என்று சொல்கிறான் குணசேகரன். அதுக்கு நந்தினி மாமா நைட்டு சோறு சாப்பிட்டா சுகர் வந்துடும்னு சொல்கிறாள். முன்னாடி கொழுப்பு இப்ப சுகரா எம்மா நா நல்லாத்தான் இருக்கேன்னு எனக்கு தெரியும்.

அந்த நேரத்தில் ரேணுகா தோசை சுட்டு கொண்டு வர, இட்லியவே சுட்டு நட்டுட்டீங்க இது தோச வேற வேண்டிக் கெடக்கு என்று பேசவே ரேணுகா அப்படியே தோசையை எடுத்துக் கொண்டு செல்கிறாள். உடனே குணசேகரன் எம்மா இங்க வையம்மா உடனே எடுத்துட்டு போயிடுவா என்று சொல்ல, நந்தினி கோதுமை மாவ பிசஞ்சி பூரி சுட்டுத் தரவா என்று கேட்கிறாள்.

நல்லா சுடுவ பூரி.. நைட்டு நேரத்துல பூரிய சுட்டு தந்து எண்ணெய் ஒத்துக்காம நா மேலயும் கீழயும் அலஞ்சிட்டு கெடக்கணும்னு நினைக்குறியா. என்ன ஒரேடியா அனுப்பிடலாம்னு முடிவு பண்ணிட்டியா இது தேக்கு.. என்னய எதும் பண்ண முடியாது என்று தற்பெருமை பேசுகிறான்.

கரிகாலனிடம் இட்லி வேண்டுமா என்று கேட்கிறாள் நந்தினி. அதுக்கு நான் வயிறு ஃபுல்லா சாப்பிட்டா தூங்கிடுவேன் என்று கூறுகிறான். மாமனார் வீட்டுக்கு வர்றதே நல்லா சாப்பிட்டு தூங்கதானே.. நாங்கதான் எங்க போனாலும் வேலக்காரியாட்டம் வேலை செஞ்சு சாவணும் உனக்கு என்ன சாப்பிட்டு நல்லா தூங்கு என்கிறாள் நந்தினி. அதற்கு இன்னிக்கு எனக்கு மாமா ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணியிருக்காருனு சொல்ல நந்தினி தலையில் அடித்துக் கொண்டு அடுப்பாங்கரைக்கு செல்கிறாள்.

தோசையைக் கொடுத்து சாப்பிடச் சொல்கிறார் குணசேகரன். மேலும் தோசை வேண்டும் என்று கேட்கிறான். அங்க என்னம்மா பேசிட்டு இருக்கீங்க தோசைய கொண்டு வாங்க என அதட்டி கேட்க, உள்ளே ரேணுகாவிடம் பேசிக் கொண்டிருந்த நந்தினி தோசையை எடுத்துக்கொண்டு வருகிறாள்.

குணசேகரனிடம் மாமா உங்க ஃபர்ஸ்ட் நைட் எங்க நடந்துச்சு என கேட்க, ஞானசேகரன் கோபப்படுகிறான். சாப்பிடும் இடத்தில் நடு வீட்டிலிருந்து கேட்கக்கூடிய கேள்வியா இது என அவனை திட்ட ஆரம்பிக்க, குணசேகரன் அட விடுப்பா ஆர்வக்கோளாறுல பேசிட்டு இருக்கான். தனக்கு முதலிரவு நடந்ததே நினைவு இல்லடா. நா அப்ப கஷ்டப்பட்டு உழைச்சிட்டு இருந்தேன். குடும்பத்துக்காகவும் தம்பிகளுக்காகவும் உழச்சதால அதுக்குலாம் நேரம் இல்லடா என்று சொல்ல, கரிகாலன் அப்றம் தர்ஷன், தர்ஷினிலாம் எப்படி என்று கேட்கிறான். மீண்டும் திட்டி கரிகாலனை அமைதியா இருக்கும்படி கேட்கிறான்.

அதற்குள் அங்கு சக்தியும் ஜனனியும் வருகிறார்கள். குணசேகரன் வீட்டுக்கு விருந்தாள் வந்திருக்கிறது என்று சொல்ல, ஜனனி அப்பத்தாவுக்கு மருந்து வாங்கிட்டு வந்திருக்கேன் என ரேணுகாவை அழைக்கிறாள். கையெழுத்து போடாத கடுப்பில் இந்த வீட்டுக்கு ஏன் வந்தீங்க என்று கோபத்தில் கேட்டுவிட்டு, நந்தினியிடம் அவர்கள் கையெழுத்து போடாம விடமாட்டேன் என்று சொல்ல சொல்கிறான்.

இந்த நேரத்தில் குணசேகரனின் மகள் தர்ஷினி, தன்னை அடிக்க வந்ததாகவும் அவளுக்கு ஏன் கராத்தே கற்று தந்தீங்க எனவும் சொல்லி முன்பு நடந்த ஒன்றை சபையில் போட்டு உடைக்கிறான். அதை சொல்லாதே என ஞானசேகரன் சொல்லியும் கேட்காமல் மொத்ததையும் சொல்ல, குணசேகரன் தர்ஷினியை அழைக்கிறான்.

மாடிக்கு வேலையாக சென்ற தர்ஷினி என்ன என்று கேட்டு குணசேகரன் பக்கம் வந்து நிற்கிறாள். குணசேகரன் நீ கரிகாலன் மாமாவை அடிக்க போனியா என்று கேட்க அவள் அமைதியா நிற்கிறாள். குணசேகரன் கோபத்தில் மீண்டும் கத்தி கேட்க, அவன் தான் என்கிட்ட சீண்டுனான் என்று சொல்கிறாள்.

என்ன அவன் இவன்னு பேசிட்டு இருக்க. இந்த வீட்டுல ஆம்பளைங்கள எதித்தே பேசக்கூடாது தெரியும்ல. எங்க இருந்து வந்துச்சு இந்த தைரியம் என்று கேட்க, தர்ஷினி வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்கிறாள். அவன் இந்த வீட்டோட மாப்பிள்ளை, ஆதிரையோட வீட்டுக் காரன், உனக்கு மாமன் மரியாதையை மாமன்கிட்ட மன்னிப்பு கேளு என்று சொல்ல அவள் அதிர்ச்சியில் ஏன் நான் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கேட்கிறாள்.

நான் என்ன தப்பு பண்ணேன் கேட்க முடியாது என்றவளிடம் கோபத்தில் கையை நீட்டி விடுவேன் என்று குணசேகரன் சொல்ல, முடியாது இது என் தன்மானப்பிரச்னை நான் கேட்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவள்பாட்டுக்கு மாடி ஏறி சென்று கொண்டே இருக்கிறாள். குணசேகரனும் கோபத்தில் அவளை கத்தி கூப்பிட ஞானசேகரன் அவனை சமாதானப்படுத்திவிடுகிறான்.

உடனே ஜனனியை திட்டி வெளியே அனுப்புகிறான். இவள்தான் எல்லாத்துக்கும் காரணம், எல்லாத்தையும் சரி பண்ணி ஆகணும். கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் 3 நாளா நடக்காம இருந்த சடங்கு இன்னைக்கு நடந்தே ஆகணும் என மருமகள்களை திட்டி நடந்தே ஆகணும் என சொல்லிட்டு போகிறான். கரிகாலனும் மாமா சொல்லிட்டார்ல பர்ஸ்ட் நைட்டுக்கு ரெடி ஆகு என்று சொல்கிறான். ஆதிரை பயப்படுகிறாள். சமாளிச்சிடலாம் பயப்படாத உன்ன மீறி யாரும் உன்ன எதுவும் பண்ண முடியாது என தைரியம் சொல்கிறார்கள்.

கௌதம் - ஜனனி - ஜீவானந்தம் - அப்பத்தா இவர்களுக்குள் இருக்கும் சம்பந்தம், ஜனனியைப் பற்றி ஜீவானந்தமும், ஜீவானந்தம் பற்றி ஜனனியும் விசாரித்து சொல்லும்படி இருவருமே கௌதமை கேட்டிருக்கிறார்கள். இதனால் குழப்பத்தில் இருந்தாலும் இதனை எப்படியும் சரி செய்ய வேண்டும் என கௌதம் தனது பைக்கில் ஜீவானந்தம் வீட்டுக்கு மறுபடியும் வருகிறான்.

கௌதம், பட்டம்மாள் குறித்து பேச ஆரம்பித்து பட்டம்மாள் பக்கம் இருக்கும் நியாயத்தைக் கூறுகிறான். ஆனால் தயக்கத்தில் பல விசயங்களைப் பேச மறுக்கிறான் என ஜீவானந்தம் நினைக்கிறான். அதற்கு பின்னால் இருக்கும் காரணம் குறித்து கேட்கிறார் ஜீவானந்தம். ஜனனி தன் தோழி என்பதை ஜீவானந்தத்திடம் வெளிப்படையாக கூறிவிட்டு, அவர்கள் பக்கமே நிற்பேன் என கௌதம் கொடுத்த உறுதியை ஜீவானந்தம் நம்புகிறான்.

குணசேகரன் வீட்டில் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் முதல் இரவு நடைபெறும் நேரம் நெருங்க நெருங்க அவசரப்படுத்திக் கொண்டிருக்கிறான் கரிகாலன். குணசேகரனும் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி கேட்டு, கரிகாலன் அவசரப்படுத்திக் கொண்டே இருந்ததால் வா போய் பார்க்கலாம் என்று அழைத்துக் கொண்டு செல்கிறான்.

கரிகாலனை அடிக்கப் போன தர்ஷினி! அதிரடி முடிவு எடுக்கப்போகும் குணசேகரன்!

பொம்பளைங்கள அடக்கி வைக்க வேண்டும் என்று கரிகாலனுக்கு சொல்லிக் கொடுக்கிறான். கரிகாலனோ ஆதிரை மேல் காதல் இருப்பதால் நான் இப்படி இருக்கிறேன் என்று காதல் வசம் பேச, பெரிய காதல் என கேலி செய்கிறான் குணசேகரன்.

குணசேகரன் தனது மகள் பிரியதர்ஷினியே தன்னை எதிர்த்து பேசுகிறாளே. இனி நம்ம மீசையை முறுக்க வேண்டிய அவசியம் என்ன அது இருந்தா என்ன இல்லைனா என்ன என்று பேச, அந்த நேரத்தில் ஞானசேகரன் மீசையை முறுக்கிக் கொண்டிருக்க ஒரே ஜாலிதான.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 14th July 2023

விரைவில் அப்டேட் செய்யப்படும்

Updated On: 3 Aug 2023 6:50 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?