/* */

அடுத்த டிவிஸ்ட்..! மாஸ் எண்ட்ரி ஆகும் அப்பத்தா! வில்லனாக மாறிய தர்ஷன்!

மாஸ் எண்ட்ரியில் ரசிகர்களைக் கவர்ந்த அப்பத்தாவால் அடுத்து என்னென்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

HIGHLIGHTS

அடுத்த டிவிஸ்ட்..! மாஸ் எண்ட்ரி ஆகும் அப்பத்தா! வில்லனாக மாறிய தர்ஷன்!
X

எதிர்நீச்சல் சீரியல் இன்று | Ethirneechal serial today episode youtube full episode



திங்கள் கிழமை எதிர்நீச்சல் எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் மற்றும் கதிர் ஆகியோருக்கு அப்பத்தா கொடுத்த பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இந்த நிலையில், செப்டம்பர் 4 ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அப்பத்தாவின் திருப்புமுனையான செயல்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இந்த எபிசோடின் ஆரம்பத்தில், குணசேகரன் ஈஸ்வரியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று ஊர் பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது, அப்பத்தா வீட்டிற்குள் நுழைகிறார். அலப்பறை கிளப்புறோம் பாடலுடன் அங்கு வரும் அப்பத்தா அங்கு அடுத்து அலப்பறை செய்ய இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு ஆவலான எபிசோடாக மாறியது.

விவாகரத்து விசயத்துக்காக அங்கு வந்திருக்கும் பெரியவர்கள் முன் அப்பத்தா கெத்தாக நடந்து சென்று ஒரு முக்கியமான விசயத்தை பேச வேண்டியிருப்பதாக கூறுகிறார்.

அப்பத்தா, "இது எல்லாம் இருக்கட்டும். அதுக்கு முன்னாடி, எனக்கு சில முக்கியமான விஷயங்கள் பேச வேண்டியது இருக்கு" என்று கூறுகிறார். அப்போது, அங்கு இருந்த ஊர் பெரியவர்கள், "இங்கே நீங்கள் வேற என்ன பேசுறீங்க? விவாகரத்து பற்றி முடிவு எடுக்கணும் என்று கூறுகிறார்கள்.

அதற்கு அப்பத்தா, "இங்கே நான் 40% ஷேரில் இருக்கிறேன். அதனால, இந்த வீடு என் இடம்தான். நீங்க இங்கே இருந்து வெளியே போங்க" என்று கூறுகிறார். இதனால், ஊர் பெரியவர்களை இப்போ நீங்க போங்க பிறகு வந்து பேசலாம் என்று அனுப்பி வைத்துவிடுகிறார் அப்பத்தா.

மேலும் அப்பத்தா, குணசேகரனை உனக்கு சொந்தமான மாடிக்கு வா நான் அங்கு வச்சு உன்னிடம் பேச வேண்டும். உனக்கு 5 நிமிசம் டைம் என்று சொல்லிவிட்டு மாடிக்குச் செல்கிறார் அப்பத்தா. குணசேகரனும் எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறான். சுற்றியும் மற்றவர்களும் அமர்ந்திருக்க, ஞானம் வருவதற்காக காத்திருக்கிறான் குணசேகரன்.

அதன்பிறகு, அப்பத்தா, "குணசேகரன், நீ என்னை வீட்டை விட்டு வெளியேற சொல்லி மிரட்டுற. நான் வெளியே போக மாட்டேன். நான் என்ன சொல்றேன்னு கேட்டுட்டு உன் வேலைய பாரு" என்று கூறுகிறார்.

இதனைக் கேட்டதும் கதிர் அப்பத்தாவின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு நெறிக்க முற்படுகிறான். அப்போது அங்கு இருக்கும் போலீஸ்காரர் ஏய் கையை எடு, இல்லன்னா உள்ள போய் தூக்கி போட்டுருவேன். நீங்க இப்படி எல்லாம் பண்றீங்கன்னு தெரிஞ்சு தான் அவங்க போலீஸ் பாதுகாப்போடு வந்திருக்காங்க. அதற்குப் பிறகும் இப்படி எல்லாம் பண்றீங்க என்று போலீஸ் காரர் மிரட்டுகிறார். இதனால் கதிர் அமைதியாக இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அப்பத்தா, தான் இன்னும் ஒரு வாரத்தில் தன் சொத்துக்களை என்ன செய்யணுமோ அதை செய்ய இருப்பதாகவும், அதுவரைக்கும் நீ இந்த மருமகள்களை அடித்து துன்புறுத்தினால் தான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை எனவும் கூறுகிறார்.

அதுபோல இனி இந்த வீட்டில்தான் சக்தியும் ஜனனியும் தன்னுடன் இருப்பாங்க என்று சொல்கிறார். அதற்கு கதிர் கோபமடைந்து கத்த, அப்படி என்றால் கீழே இருக்கும் என்னுடைய போர்சனில் எல்லாத்தையும் நான் மூடி விடுவேன். நீங்க மாடியில் மட்டும் தான் புலங்க வேண்டும். நீங்க மாடிக்கு கயிறு மூலமாக வருவீங்களோ எப்படி வருவீங்களோ எனக்கு தெரியாது என்று செக் வைக்கிறார் அப்பத்தா. இதற்கு என்ன சொல்வது என்று புரியாமல் குணசேகரன் பதில் எதுவும் சொல்லாமல் கோபத்தோடு முறைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த அப்பத்தாயின் செயல்களால், குணசேகரனும், கதிரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இந்த எபிசோட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை எதிர்நீச்சல் எபிசோட் | | Ethir neechal serial yesterday episode youtube

போலீஸோடு என்ட்ரி கொடுக்கும் அப்பத்தா தான் இன்னிக்கு தேதிக்கு டாக் ஆஃப் தி டவுன். சும்மா கெத்தா ஜெயிலர் ரஜினி மாதிரி என்ட்ரி கொடுக்கிறார் அப்பத்தா இனி அடுத்தடுத்து என்ன ஆகும் என்பதை தான் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் குணசேகரன் ஈஸ்வரியை வெட்டி விட அவரது சொந்தக் காரர்களை எல்லாம் கூட்டி வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஈஸ்வரி அழுது கொண்டு இருக்கிறாள். அவளை நந்தினியும் ரேணுகாவும் சமாதானம் செய்து கொண்டிருக்கின்றனர். ஈஸ்வரி அழுது கொண்டே இருந்தால் எப்படி, குழந்தைகளிடம் பேசி அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். அவர்கள் இன்னும் சாப்பிடவில்லை என்பதால் பாலாச்சும் குடுத்து கூட்டி வாங்க என்று சொல்ல, ஈஸ்வரியும் தர்ஷன், தர்ஷினி இருவரையும் அழைக்கிறாள். ஆனால் தர்ஷினிக்கு திடீரென்று கோபம் கொந்தளிக்கிறது.

இவ்ளோ பயந்து பயந்து இந்த வீட்டுல ஏன் இருக்கணும்னு என்று தர்ஷினி கேட்க அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இந்த ஆளுகிட்ட நீ ஏன் அடிமையா இருக்க, இந்தவீட்ல நாம ஏன் இருக்கணும் பிரச்னைகள தாங்கிட்டு இருக்கேன்னு மட்டும் சொல்லாத என தர்ஷினி சொல்ல, அடுத்து தர்ஷன் இந்த ஆளு இன்னொரு தடவ உன்ன ஏதாவது தப்பா பேசுனா நா சும்மா இருக்க மாட்டேன் என கத்துகிறான்.

ஈஸ்வரி இதைக் கேட்டதும் நெகிழ்ந்து அவர்களைக் கட்டி அனைத்து பாசமழை பொழிகிறாள். மற்றவர்களும் ஈஸ்வரியை குழந்தைகள் சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்களே என நினைத்து மகிழ்கின்றனர்.

ஈஸ்வரி தர்ஷனையும் தர்ஷினியையும் படிக்க சொல்கிறாள். அவர்களுடன் அமர்ந்து சந்தேகங்கள் எதுவும் இருந்தால் சொல்லிக்கொடுக்க இருக்கிறாள். அந்த நேரத்தில் வீட்டில் கீழே குணசேகரன், ஈஸ்வரியின் அப்பா மற்றும் மேலும் ஒரு சில பெரியவர்களோடு அமர்ந்திருக்கிறார்.

ஈஸ்வரியின் அப்பா குழப்பத்துடன் தன்னையும் மற்ற பெரியவர்களையும் ஏன் வரச் சொல்லியிருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு குணசேகரன் நடந்ததை கூறி, நீங்கள் சொன்ன உண்மையின் விளைவுதான் இது என்று கூறுகிறார் குணசேகரன். ஜீவானந்தத்துக்கும் ஈஸ்வரிக்கும் நடந்ததை சொல்லி குணசேகரன் ஈஸ்வரியை அத்துவிட போவதாக கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ஈஸ்வரியின் அப்பா, நான் எதார்த்தமாதானே சொன்னேன். அப்படினாலும் ஈஸ்வரிக்கு ஜீவானந்தத்த யார்னே தெரியாது என்றும் கூறி குழப்பத்தில் நிற்கிறார்.

ஈஸ்வரியின் அப்பா குணசேகரனை பாவி மனுசன் என்று சொல்ல அதற்கு கதிர் எகிறிக் கொண்டு வருகிறான். ஒருமையில் பேச ஈஸ்வரி கோபத்தில் கதிரை திட்ட ஆரம்பிக்கிறாள். இடைமறித்த குணசேகரன் தன்னுடைய மாமாவிடம் எங்களை பிரித்து விட்ருங்க மாமா இவளுக்கு எவ்வளவு ஜீவாம்சம் வேணுமோ கேட்கச் சொல்லுங்க. நான் கொடுத்துருந்தேன். அவளை வீட்டை விட்டு போக சொல்லுங்க என்று சொல்கிறார்.

அதற்கு ஈஸ்வரி பதிலடி கொடுக்கிறாள். கல்யாணம் என்கிற பெயர்ல ஒரு பொண்ண கூட்டி வந்து அவள கனவ சிதச்சி, அவள அடச்சி வச்சி சித்ரவதை பண்ணி இப்ப பணம் தரேன் போயிடுனு சொன்னா என்ன அர்த்தம் என்று கேட்கிறாள். நான் படிச்ச படிப்புக்கு வேலைக்கு போயிருந்தா என்னோட ரேஞ்ச் இப்ப என்னனு தெரியுமா என்று கேட்கிறாள்.

குணசேகரன் மீண்டும் தன்னுடைய மாமாவிடம் இவளை பிரித்து விட வேண்டும் என்று சொல்ல, அதற்கு அவருடைய மாமா இத்தனை வயசுக்கு பிறகு பிரிச்சு வச்சு என்ன பண்ண போற என்று கேட்க, குணசேகரனை கட்டிக்க ஆயிரம் பொண்ணுங்க வருவாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் அப்பத்தா போலீஸ்காரர்களோடு வீட்டிற்குள் வருகிறார். சும்மா பிஜிஎம் போட்டு தெரிக்க விட ரஜினிமாதிரி ஒரு சூப்பரான என்ட்ரியைக் கொடுக்கிறார். அடுத்து என்ன ஆகப் போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

எதிர் நீச்சல் சீரியல் நேற்று | Ethir neechal serial yesterday episode youtube

நால்வரும் காரில் பயணித்துக்கொண்டே அப்பத்தா குறித்து பேசுகிறார்கள். அப்பத்தா ஜீவானந்தம் இடத்தில்தானே இருப்பாங்க என்று நந்தினி கேட்டு ஃபீலாகிறார். அதற்கு ஜனனி பதில் சொல்லிக் கொண்டே வருகிறாள்.

நந்தினியும், ஜனனியும் ஜீவானந்தம் குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் பேசி வருத்தப்பட்டுக் கொண்டே பயணிக்கின்றனர். அவர்களது குடும்பத்தை கலைத்து கதிர்வேலை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது என அழத் துவங்குகிறாள்.

ஜனனி நந்தினியிடம் ஒன்றைக் கூறுகிறாள். அது அவரிடம் பரிதாபப்படும்படி பேசினால் அவருக்கு கண்டிப்பாக பிடிக்காது. நாம போற காரியமும் நடக்காது என்று கூறுகிறாள் ஜனனி. அதுவரை அமைதியாக வந்துகொண்டிருந்த ஈஸ்வரியிடம் ரேணுகா என்ன விசயம் என்று கேட்கிறார்.

ஈஸ்வரியும் தனது கதையை நினைத்து ஃபீல் பண்ண தோணவில்லை. ஜீவானந்தம் குறித்தும் அவர்களது பழைய கதை குறித்தும் பேசி வருகிறார் ஈஸ்வரி. கடந்து போன மனுசங்க, நிகழ்வுகள் எல்லாமே இருக்கும். அத திரும்ப நினச்சி பாக்குற அளவுக்கு மனுசங்க ரொம்ப குறைவு. அத நினச்சி பாக்றப்ப ஒரு சந்தோஷம் கிடைக்கும். அதுமாதிரிதான் ஜீவானந்தம். அவர சந்திச்சப்றம்தான் என் கிராம கல்லூரி வாழ்க்கை எல்லாமே நினைவுக்கு வருது என்று பேச ஆரம்பிக்கிறாள். கண்கள் தழுதழுக்க தனது முடிந்த போன கடந்த கால வாழ்க்கையைப் பற்றி ஜீவானந்தம் நினைவு கூர்ந்ததாக சொல்லி பேசுகிறாள்.

குணசேகரன் வீட்டில் அம்மாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்பத்தாவை பற்றி திட்டிக் கொண்டிருக்கிறார் குணசேகரன். காரியம் முடியட்டும் சொத்துபூரா தன் கையில் வரட்டும் என்று பேசிக் கொண்டிருக்கையில், அங்கே பச்சை சட்டை அணிந்த கடம்பவனம் உள்ளே வருகிறார்.

கடம்பவனம் இன்னும் உயிரோடதான் இருக்கிறானா என கேட்டு வரச் சொல்கிறான் குணசேகரன். வந்தவன் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல பல வார்த்தைகளை எடுத்து பேச குணசேகரனுக்கு கோபம் தலைக்கு மேல் வருகிறது. ஆனாலும் அடக்கிக் கொண்டு இருக்கிறான்.

அவர்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கிளப் ஒன்றில் மெம்பர்சிப் வாங்குவது குறித்து உதவி கேட்டு வந்திருக்கிறார் கடம்பவனம். அந்த நேரத்தில் கிள்ளிவளவன் வீட்டுக்கே தேடி வந்திருக்கிறான்.

வந்தவரை யார் என்று கேட்கிறார் விசாலாட்சி. அவரை தன் நண்பர் எனவும் காபி கீபி எதுவும் வேண்டாம் எனவும் சொல்லும் குணசேகரன், கடம்பவனம் இருப்பதால் பேச்சைத் தொடங்காமல் இருக்கிறான். அந்த நேரத்தில் கதிர் கடம்பவனத்தை விரட்ட நினைக்கிறான்.

ஆனால் கடம்பவனம் கிள்ளிவளவனிடம் தன்னை அறிமுகப்படுத்த முனைகிறான். கடம்பவனத்தை விரட்டி விடுகிறான் கதிர். பின் கிள்ளிவளவன் குணசேகரனிடம் கோபத்தில் கொந்தளிக்கிறான்.

பின் அவர்கள் பணத்தைப் பற்றி பேசுகிறார்கள். அதே நேரம் ஜீவானந்தத்தை கொல்ல திட்டமிடுகிறார்கள். விரைவில் ஜீவானந்தத்தை கொல்ல முடிவு செய்து திட்டம் தீட்டுகிறார்கள்.

எதிர் நீச்சல் சீரியல் நாளை | Ethirneechal serial tomorrow episode youtube

தொலைக்காட்சியிலும் சன் நெக்ஸ்ட் ஆப்பிலும் வெளியான பிறகு எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட் யூடியூபில் முழு எபிசோடும் Ethirneechal serial today episode youtube full episode யூடியூபில் வெளியிடப்படும். அதற்கு முன்பாக நமது தளத்தில் அந்த எபிசோட் குறித்த ரிவியூ படித்ததற்கு நன்றி.

Updated On: 5 Sep 2023 6:39 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?