/* */

Ethirneechal Today ஜீவானந்தத்தை காதலித்த ஈஸ்வரி? வெளியான உண்மைக் கதை!

ஜீவானந்தம் பற்றி உண்மையைக் கூறிய ஈஸ்வரி... சொத்துக்களை மீட்க வேண்டும் என கட்டளையிடும் குணசேகரன்.

HIGHLIGHTS

Ethirneechal Today ஜீவானந்தத்தை காதலித்த ஈஸ்வரி? வெளியான உண்மைக் கதை!
X

எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட் யூடியூபில் முழு எபிசோடும் Ethirneechal serial today episode youtube full episode வெளியாவதற்கு முன்பாக தொலைக்காட்சியிலும் சன் நெக்ஸ்ட் ஆப்பிலும் வெளியாகும்.

எதிர்நீச்சல் சீரியல் இன்று | Ethirneechal serial today episode youtube full episode

கதிர் செய்ததை சொல்லி காண்பித்து கொந்தளிக்கிறாள் நந்தினி. கொலை செய்ததை அவசரப்பட்டு சொல்லி விடுவாளோ என நினைத்து உடனே ஓடி வந்த ரேணுகா, குணசேகரன் கதிர் - நந்தினியின் மகள் தாராவை தூக்கி எறிவதாக மிரட்டிதான் அப்பத்தாவிடம் கையெழுத்து வாங்கினார் என சொல்ல, அதற்கும் சற்றும் உணராத கதிர், அவரு என் அண்ணன் எல்லா உரிமையும் இருக்கு. அவரு புள்ளைய தூக்கி போட்டாலும் நான் எதுவும் கேட்க மாட்டேன் என சொல்கிறான் கதிர். இதனால் நந்தினியும் ரேணுகாவும் ஷாக் ஆகின்றனர்.

பின் அப்படியே படி வழியாக இறங்கி கீழே வந்துவிடுகிறான் கதிர். அங்கே அண்ணன் குணசேகரனிடம் சென்று அனைவரையும் வெளியே விரட்டி விட சொல்கிறான். ஆனால் குணசேகரன் அமைதியாக இருக்கும்படி சொல்கிறான். சொத்து நம் கையில் வர வேண்டும் கிழவி கையிலிருந்து நம்ம வாழ்க்கைய கைப்பற்றணும் அதான் முக்கியம் என்று கூறிவிட்டு ரேணுகாவையும் நந்தினியையும் கீழே அழைக்கிறான்.

தாராவை இங்க வா என்று கூப்பிட அவள் பயந்துகொண்டே வராமல் தயங்கி நிற்கிறாள். பயப்படாதே வா என்று கூறியும் அவள் வரவில்லை. தாராவையும் திட்ட ஆரம்பிக்கிறான் குணசேகரன். கூடவே நந்தினியையும்.

சொத்து தன் கையில் வர வேண்டும் என அடுத்த திட்டத்தைக் கையிலெடுக்கிறான் குணசேகரன். நானும் பெரியம்மாவும் ஒரு இடத்துக்கு போயிட்டு வந்துடுறோம்னு சொல்லி தாராவை அப்பத்தா கூட இருந்துக்கோ என்று சொல்கிறாள் நந்தினி. வழக்கம்போல எகிறிக் கொண்டு செல்கிறான் கதிர்.

கதிரை தடுத்து நிறுத்தி விசாலாட்சி தள்ளி நிக்க சொல்கிறாள். நந்தினியையும் ரேணுகாவையும் போயி கிழவி கிட்ட பேசிட்டு வர சொல்கிறாள். கதிர் கோபத்தில் நானே பாத்துக்குறேன் என்று சொல்ல குணசேகரன் எரிச்சலில் கதிரை அமைதியா இருக்க சொல்கிறான். தன்னுடைய அவஸ்தையைச் சொல்லி கதிருக்கு நடக்க வேண்டியதை விளக்குகிறான்.

நால்வரும் கிளம்பி செல்கின்றனர். எங்கே செல்வது என்று தெரியாமல் குழம்ப, ஜனனி ஜீவானந்தத்தை தேடி போகலாம் என்று கூறுகிறாள். கோவிலுக்கு அருகில் ஒரு மரத்தடியில் நின்று அனைவரும் பேசுகின்றனர்.

ரேணுகா ஜனனியிடம் ஜீவானந்தம் குறித்து பேசுகிறாள். அவரது மொபைல் எண் இருக்கிறதா என்று கேட்க தன்னிடம் இல்லை என்று கூறுகிறாள் ஜனனி.

ஜீவானந்தம் குறித்து ரேணுகா, ஈஸ்வரியிடம் கேட்க அவளும் ஃபீல் பண்ணி பேச ஆரம்பிக்கிறாள். குணசேகரன் ஒரு கொலைகாரன் அவனோட மனைவி நான்னு வருத்தப்பட்டு பேச, நந்தினியும் நானும் ஒரு கொலைகாரனோட பொண்டாட்டிதான் என்று கோபத்தில் சொல்கிறாள். தானும் எமோசனலாக அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என நினைக்க சக்திதான் உண்மையைப் புரிய வைத்தான்.

அதுமட்டுமின்றி சட்டத்துக்கு முன் நிறுத்தினால் அவர்கள் ஈஸியா வெளியே வந்துவிடுவார்கள். ஜீவானந்தத்துக்கு தெரிந்தால் உடனடியாக கொன்னுடுவார். அதனால் அம்மாவ இழந்த குழந்த அப்பாவையும் இழக்க நேரிடும். இப்போதைக்கு நாம அப்பத்தாவ பாத்துதான் பேசணும்.

ஜனனி கௌதமிடம் பேச தயங்க, ஐஸ்வரி அவனுக்கு ஃபோன் செய்கிறாள். ஆனால் அவன் ஃபோனை எடுக்கவில்லை. ஆனால் இம்முறை ஃபர்ஹானா ஃபோனை எடுக்கிறார். ஆனால் ஜீவானந்தத்தை சந்திக்க முடியாது என்று சொல்கிறார். நடந்தவற்றை ஈஸ்வரி சொல்லி தங்களால் ஜீவானந்தத்துக்கு எந்த தொந்தரவும் மன கஷ்டமும் வராது. நான் கண்டிப்பாக அவரைச் சந்தித்து பேச வேண்டும் உதவுங்கள் என ஈஸ்வரி சொல்ல அவரும் இரக்கப்பட்டு பார்க்க வர வேண்டிய இடத்தைச் சொல்கிறாள்.

நால்வரும் கார் புக் செய்து கிளம்புகிறார்கள். அப்பத்தாவை காண்பார்களா? ஜீவானந்தம் தன்னுடன்தான் அப்பத்தாவை வைத்திருக்கிறாரா என்பதை அடுத்த எபிசோடில் காண்போம்.

அவர்களுடன் நந்தினி, ரேணுகா இருவரும் கோவில் மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜீவானந்தத்துக்கு இப்படி ஒரு கஷ்டம் அதுவும் என் சம்பந்தப்பட்ட ஆள்கிட்ட இருந்து வரும்னு நான் எதிர்பார்க்கல என்று ஈஸ்வரி தெரிவிக்கிறார்.

எதிர் நீச்சல் சீரியல் நேற்று | Ethir neechal serial yesterday episode youtube

ஜனனியும் சக்தியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஜனனி தனது பதிலடியைக் கொடுக்க வழி தெரியாமல் அழுது கொண்டிருக்கிறார். அதே நேரம் இது ஜீவானந்தத்துக்கு தெரிந்தால் கதிர்வேலைக் கொன்று விடுவார். குடும்பமா நியாயமா என்ற போராட்டத்தில் தான் இருப்பதை ஜனனி அழுகையில் சொல்கிறார்.

ஜனனிக்கு கதிரை போலீஸில் ஒப்படைத்துவிட்டால் கூட அட்லீஸ்ட் கதிர் உயிருடன் இருப்பான். இல்லை ஜீவானந்தம் கண்டிபிடித்தால் சுட்டுக் கொன்று விடுவார் என ஜனனி அழுகிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த சக்தி, கதிர் சாக வேண்டியவன்தான் தனக்கு வந்த கோபத்துக்கு அவனை என்றோ கொன்றிருப்பேன் என பேசுகிறான். இதனால் ஜனனி கொஞ்சம் குழப்பமடைகிறாள். என்னதான் பிரச்னை என்றாலும் தம்பிக்கு அண்ணன் மேல் இப்படி ஒரு கோபம் இருக்கிறதே என நினைக்கிறாள்.

குணசேகரன் பற்றியும் கதிர் பற்றியும் சொல்லி குணசேகரனை எதிர்த்து ஆதாரங்களை முதலில் பிடிப்போம். அப்பத்தா விசயம் முடியட்டும் நானே அவனுங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்குறேன் என கூறுகிறான் சக்தி. உடனே சக்தி ஜீவானந்தத்தின் குழந்தைக்காக பரிவு பேசுகிறாள். அவளைப் பற்றி கவலை கொள்கிறாள் ஜனனி.

வீட்டில் ரேணுகா, நந்தினி கவலையில் ஊறி இருக்க, தர்ஷனும் தர்ஷினியும் என்ன விசயம் என்று கேட்கிறார்கள். அதற்கு ஜனனி அவர்களை எதுவும் கேட்கவேண்டாம் ப்ளீஸ் உங்க ரூமுக்கு போங்க என்று தெரிவித்துவிடுகிறாள். அந்த நேரத்தில் குணசேகரன் கடுங்கோபத்துடன் வீட்டுக்குள் வருகிறார்.

நேராக வந்து டைனிங் டேபிள் அருகே நின்று உறுமுகிறார். கிழவி ஏன் தாடிகாரன் கூட போயிருக்கா. நந்தினி எழுந்து வந்து சண்டைக்கு நிற்கிறாள். அடுத்து மல்லுக்கு வர தயாராகிறார் ரேணுகா. அவர்களைத் தடுத்து நிறுத்திவிடுகிறாள் ஜனனி.

ரேணுகாவுக்கும் அவள் கணவன் ஞானத்துக்கும் சண்டை நடக்கிறது. கிழவி ஏன் அந்த ஜீவானந்தத்துடன் செல்கிறாள் என கோபத்தில் ரேணுகாவை அடிக்கப் பாய்கிறான் ஞானசேகரன். அவனைத் தடுத்து நிறுத்திய குணசேகரன் அடுத்து ஈஸ்வரியிடம் அப்பத்தாவின் திட்டம் என்ன என்று கேட்கிறான்.. கடுங்கோபத்தில் அவளிடமும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறான். வீடே ரணகளமாகிறது.

ஜனனிக்கு எல்லாம் தெரியும் என குணசேகரன் சொல்ல ஜனனி முறைக்கிறாள். அனைவரும் டிராமா போடுகிறீர்கள் இதுக்கு மேலயும் போட்டா நான் பொல்லாதவனாக மாறிவிடுவேன் என்று ஞானசேகரன் சொல்கிறான். அப்படியே நந்தினி, ரேணுகாவை இழுத்துக் கொண்டே சமையலறைக்கு செல்கிறாள். ஜனனி அவள் வீட்டுக்கு சென்றுவிடுகிறாள்.

குணாவும் ஞானமும் பெரிய திட்டம் ஒன்றை தீட்டுகின்றனர். பெரிசா ஏதோ செய்ய இருப்பதாக கூறுகிறான் குணசேகரன்.

வீட்டு மருமகள்கள் 4 பேரும் வீட்டின் முன் படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறார்கள். குணசேகரனின் அராஜகத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என கொந்தளிக்கின்றனர். ஜீவானந்தத்தைப் பற்றியும் அவர் மனைவியைக் கொன்றது பற்றியும் பேசிக்கொள்கின்றனர். கதிரை கொலைகாரப்பய என்று குறிப்பிடுகிறாள் ரேணுகா. தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள் நந்தினி.

இவர்கள் நாலு பேரும் சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என திட்டமிடுகின்றனர். கதிர்வேலை தலைமுழுகிவிட்டதாக கோபத்தில் கொந்தளித்து பேசுகிறாள் நந்தினி. அப்பத்தாவைப் பற்றி பேசுகிறாள் ஈஸ்வரி. அவர்களைக் காப்பாற்றவேண்டும் ஜீவானந்தத்தைப் பற்றி பேசவேண்டும் என தெரிவிக்கிறாள்.

ஜனனி ஜீவானந்தத்தைப் பற்றி பேசுகிறாள். அப்பத்தாவுக்காக வந்தாரு அப்பத்தாவுடன் சென்றுவிட்டார் என்று ஜனனி சொல்கிறாள். அவர் என்னை பார்த்தா பேசுவாரோ இல்லையோ என சொல்கிறாள் ஜனனி. அப்போது ஈஸ்வர் அவரு கண்டிப்பா பேசுவாரு என்று சொல்லி ஜீவானந்தத்தைப் பற்றி பேச ஆரம்பிக்கிறாள் ஈஸ்வரி.

பழைய கதை எல்லாத்தையும் சொல்லி, ஜீவானந்தத்தை பற்றி பேச தன்னை சந்திக்க வந்த விசயத்தையும் பேசுகிறாள்.

ஜீவானந்தத்தை நிச்சயம் சந்திக்க வேண்டும் என ஈஸ்வரி கூறுகிறாள்.

காலையில் ஈஸ்வரி கிளம்பி காத்திருக்கிறாள். அப்போது ஜனனியும் கிளம்பி வருகிறாள்.

வீட்டில் தாரா படுத்துக் கொண்டு படித்துக்கொண்டிருக்கிறாள். அப்போது அங்கு வரும் நந்தினி, தாராவை எழுந்து அமர்ந்து படிக்கச் சொல்கிறாள். அந்த நேரத்தில் கதிர் அங்கு வந்து காபி போட்டுத் தர சொல்லி மிரட்டுகிறான். ஆனால் நந்தினி எதற்கும் அடி பணியவில்லை.

அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. பேச்சு வேகமாக அடுத்தடுத்து வாக்குவாதம் செய்ய, கதிர் கொலை செய்ததைப் பற்றி பேச முற்படுகிறாள் நந்தினி. அப்போது ரேணுகா வந்து தடுக்கிறாள்.

எதிர் நீச்சல் சீரியல் நாளை | Ethirneechal serial tomorrow episode youtube

நாளைக்கான எபிசோடில் என்ன நடந்து என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?. இதோ இந்த லிங்கை கிளிக் செய்து படியுங்கள்.

தொலைக்காட்சியிலும் சன் நெக்ஸ்ட் ஆப்பிலும் வெளியான பிறகு எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட் யூடியூபில் முழு எபிசோடும் Ethirneechal serial today episode youtube full episode யூடியூபில் வெளியிடப்படும். அதற்கு முன்பாக நமது தளத்தில் அந்த எபிசோட் குறித்த ரிவியூ படித்ததற்கு நன்றி.

Updated On: 29 Aug 2023 5:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  4. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  5. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  6. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  7. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  8. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  9. ஈரோடு
    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!