பிக்பாஸ் வீட்டில் நடிகை தனலட்சுமி கதறி அழுதது ஏன் தெரியுமா?
Dhanalakshmi Wants to Exit Bigg Boss Tamil Season 6 -பிக்பாஸ் வீட்டில் நடிகை தனலட்சுமி கதறி அழுதது ஏன் தெரியுமா? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
HIGHLIGHTS
Dhanalakshmi Wants to Exit Bigg Boss Tamil Season 6 -விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 6 பொழுது போக்கு நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கி தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ஜி.பி. முத்து, சாந்தி, அசல்கோலாறு உள்ளிட்ட ஆரம்ப கட்ட எமிமினேசனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி தினமும் களை கட்டி வருகிறது.
dhanalakshmi wants to exit bigg boss tamil season 6இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் தனலட்சுமியை தண்டித்த நிலையில், தனக்கு அவமானமாக இருக்கு என சொல்லி கதறி அழுதிருக்கிறார். மேலும் தன்னை வெளியில் அனுப்பும்படி அவர் கேட்டு வருகிறார்.
இது தொடர்பாக தனலட்சுமி கண்ணீருடன் பேசி ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் அப்படி என்ன தான் பேசி இருக்கிறார் என பார்ப்போமா?
dhanalakshmi wants to exit bigg boss tamil season 6நான் ரொம்ப கனவோடு தான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தேன். ஆனால் இங்கு நான் என்னையே அசிஙு்கப்படுத்திகிட்டேன் என நினைக்கிறேன். வெளியில் கூட சொல்ல முடியாத அளவிற்கு எனக்கு ரொம்பவே அவமானமா இருக்கு. நான் ஒன்றும் திருடி இல்லை என சொல்லி ரொம்பவே கதறி கண்ணீர் விட்டு கஷ்டப்பட்டு தனலட்சுமி வெளியிட்ட ஒரு வீடியோ தான் இன்று பிக்பாஸ் 6 சீசனின் முக்கிய ப்ரோமா ஆக உள்ளது.
dhanalakshmi wants to exit bigg boss tamil season 6இந்த ப்ரோமாவை பார்த்த ரசிகர்கள் பலரும் கண் கலங்கி உள்ளனர். அதற்கு காரணம் தனலட்சுமி இதற்கு காரணம் என்ன என்பது பற்றி நடந்த சம்பவங்களை ரியலைஸ் செய்து மிக விளக்கமாக கூறி இருக்கிறார். ஒரு சின்ன விஷயம் இவ்வளவு பெரிய பிரச்சனையாக வெடிக்கும் என நான் நினைக்கவில்லை. இதுவரை நான் சரியாக தான் விளையாடி வருகிறேன். நான் பேசியது எல்லாம் சரியாக தான் இருந்தது என கூறி உள்ளார்.
dhanalakshmi wants to exit bigg boss tamil season 6இந்த ப்ரோமாவை பார்த்த ரசிகர்கள் பலரும் தனலட்சுமி இப்போது கதறி அழுவதற்கு காரணம் அவரே தான். ஏனென்றால் ஒரு சில இடங்களில் தனலட்சுமி ரொம்பவே ஆட்டிடியூட் காட்டினாங்க. அது மட்டும் அல்ல அவங்க செய்யறது தான் கரெக்டு மற்ற எல்லாம் சரி கிடையாது என்பது போல் செய்தாங்க. அதனால் தான் அவர் இப்ப இந்த பொசிஷன்ல இருக்காங்க என ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.
இன்னும் சில ரசிகர்களோ தனலட்சுமிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இதற்காக கவலைப்படாதீர்கள், எல்லாம் சீக்கிரம் சரியாகி விடும். இதற்காக நீங்கள் அழுவாதீங்க என அவருக்கு ஆதரவாக ஆறுதல் கூறி வருகிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2