திருச்சிற்றம்பலம் படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டு கண்கலங்கிய இயக்குநரின் தாய்
Thiruchitrambalam Movie - தனுஷ் நடிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது
HIGHLIGHTS
Thiruchitrambalam Movie -தனுஷ் நடிப்பில் நேற்று ஆகஸ்ட் 18ம் தேதி படு மாஸாக வெளியான ஒரு திரைப்படம். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா என பலர் நடித்துள்ளார்.
நேற்று வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் வசூலிலும் கலக்கி வருகிறது.
இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் முதல் நாளில் மட்டுமே ரூ. 7.4 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளே செம கலெக்சன் என தனுஷ் ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.
படம் பார்த்துவிட்டு வெளிய வந்த ரசிகர்கள், குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என கூறியுள்ளனர்.
இந்நிலையில், அப்படத்தின் முதல் காட்சியை பார்த்த இயக்குநரின் தாய் கண்கலங்கினார். சிறு வயது முதலே தனுஷை தெரியும் என கூறிய அவர் ஒரு குடும்பமாக பழகி வந்ததாக கூறினார். படத்தின் இறுதிக் காட்சி தன்னை மிகவும் பாதித்ததாக அவர் கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2