/* */

தனுஷுக்கு மன உளைச்சல்... ஓபனா போட்டு ஒடச்சிட்டாரே!

தான் மன உளைச்சலில் இருந்ததை பொது மேடையில் ஓப்பனாக பேசியுள்ளார் நடிகர் தனுஷ். அதுவும் அவரது பட விழாவிலேயே இப்படி பேசி அவரது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

HIGHLIGHTS

தனுஷுக்கு மன உளைச்சல்... ஓபனா போட்டு ஒடச்சிட்டாரே!
X

தான் மன உளைச்சலில் இருந்ததை பொது மேடையில் ஓப்பனாக பேசியுள்ளார் நடிகர் தனுஷ். அதுவும் அவரது சொந்த பட விழாவிலேயே இப்படி பேசியிருப்பது அவரது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தில் நடிக்க அவருக்கு பிடிக்கவே இல்லையாம். கதை கேட்டுவிட்டு ரிஜக்ட் செய்யலாம் என்றே கதை கேட்டதாகவும் கூறியுள்ளார் தனுஷ். இதனால் சுவாரஸ்யமாக சென்றது வாத்தி பட இசை வெளியீட்டு விழா.

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதுமாதிரியான இன்னொரு வெற்றிப்படமாக வாத்தி படம் அமையும் என தனுஷும் அவரது ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி யின் வாத்தி படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இந்த படம் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

வாத்தி பட விழாவுக்கு தனுஷ், அவரது மகன்கள் வந்திருந்தனர். மகிழ்ச்சியாக வந்திருந்த அவர்களைப் பார்த்து ரசிகர்களும் செம்ம ஹேப்பி. இவர்களின் வாழ்வில் சில சோகமான விசயங்கள் நடந்தாலும் அப்பா - அம்மா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தாலும் மகன்களை இருவரும் அன்புடன் வளர்த்து வருவது நல்ல விசயமாக பார்க்கப்படுகிறது. வாத்தி இசை வெளியீட்டு விழாவிலும் தனுஷ் தனது சொந்த வாழ்க்கை பற்றிய சில விசயங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

மன உளைச்சலில் தனுஷ்

வாத்தி பட இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தேறியது. சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவுக்கு பல நட்சத்திரங்கள் வருகை தந்திருந்தனர். படம் சம்பந்தப்பட்ட பலரும் வந்திருந்தனர்.

தனுஷ் மேடை ஏறியது அரங்கமே அதிர்ந்தது. தனுஷின் பேச்சுக்காக அனைவரும் காத்திருந்தனர். அவர் இந்த படத்தில் நடிக்க தனக்கு விருப்பமே இல்லை இயக்குநரை அழைத்து கதை கேட்டுவிட்டு வேண்டாம் என்று சொல்லிவிடும் முடிவிலேயே தான் இருந்ததாக கூறியிருந்தார். கொரோனா லாக்டவுன் நேரத்தில்தான் வெங்கி அட்லூரி இந்த கதையை தனுஷிடம் கூறியிருக்கிறார். அப்போது கடுமையான மன உளைச்சலில் தான் இருந்ததாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

கதை கேட்ட பிறகுதான் இது எப்பேர்பட்ட கதை தனக்கு பிடித்திருந்த கதை என்பதை உணர்ந்ததாக கூறியுள்ளார். ரொம்ப பிடித்திருந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டதாக கூறினார் தனுஷ்.

வெங்கட் அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வாத்தி படத்தில், அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 17ம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்துக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதைக் காண கோலிவுட்டும் ஆவலோடு காத்திருக்கிறது.

ஏற்கனவே இதே பாணியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் மண்ணைக் கவ்வியது. விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் விமர்சன ரீதியாக பலரின் பேச்சுக்கு ஆளாகியுள்ளது. இப்போது தனுஷ் படம் வெளியாக இருக்கிறது.

Updated On: 6 Feb 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  5. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  8. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  9. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!