/* */

உலக அளவில் படமாக்கப்படும் ராஜமவுலியின் படத்தில் மகேஷ்பாபு-தீபிகாபடுகோனே ஜோடி

deepika padukone news-இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில், உலகம் முழுவதும் படமாக்கப்பட இருக்கும் 'ஆக்‌ஷன் அட்வென்சர்' நிறைந்த அடுத்த படத்தில், தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார்.

HIGHLIGHTS

உலக அளவில் படமாக்கப்படும் ராஜமவுலியின் படத்தில் மகேஷ்பாபு-தீபிகாபடுகோனே ஜோடி
X

deepika padukone news-பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்

Deepika Padukone next movie with director Rajamouli, deepika padukone ss rajamouli, deepika padukone news-ராஜமவுலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படம் சூப்பர் ஹிட்டானது. இதில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண், ஆலியா பட், அஜய்தேவ்கன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு படக்குழு அனுப்பியிருக்கிறது. அதற்கான புரமோஷனில் இருக்கிறார் ராஜமவுலி. சுதந்திர கால போராட்டங்களை மையமாக கொண்ட இந்த 3 டி படம், ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது.


ராஜமவுலி இயக்கும் படத்தின் பிரம்மாண்டமும், காட்சியமைப்புகளில் அவர் காட்டுகிற ஈடுபாடும் ரசிகர்களை வெகுவாக வசப்படுத்தி விடுகிறது. குறிப்பாக, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் அவரது இயக்கமும், படத்தில் அவர் காட்டிய பிரம்மாண்டமும், அந்த படத்தின் மெகா ஹிட் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்திருந்தது. குறிப்பாக, பாகுபலி சண்டை காட்சிகளும், போர்க்கள காட்சிகளும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தது. சர்வ லட்சணங்களும் பொருந்திய ஒரு மாவீரனாக, மக்கள் தலைவனாக இந்த படத்தில், நடிப்பில் அதகளம் செய்த பிரபாஸ், ரசிகர்கள் மத்தியில் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்தார்.

அதுமட்டுமின்றி, மன்னர் கால கதைக்களத்தை, அவ்வளவு நேர்த்தியாகவும் சிறப்பாக எடுத்த ராஜமவுலி, அடுத்த படமான 'ஆர்ஆர்ஆர்' படத்திலும் ரசிகர்களை ஏமாற்றாத வகையில், அதுபோன்ற பிரம்மாண்ட காட்சிகளை கொண்டு வந்திருந்தார். குறிப்பாக, காட்டுக்குள் ஜூனியர் என்.டி.ஆர் மிருகங்களை பிடிக்கும் காட்சியும், அந்த மிருகங்களை வைத்து, சிறுமியை மீட்பதற்காக, அரணமனைக்குள் அத்துமீறி நுழைந்து, வெள்ளைக்கார போலீசாருடன் சண்டையிடும் காட்சியிலும் மிரட்டியிருந்தார். அத்துடன், இரண்டு ஹீரோக்களும் நடனமாடும் 'நாட்டுக்கூத்து' பாட்டு செம ஹிட் அடித்தது.


இப்படி தனது படங்களில், மெகா ஹிட் அடித்து ரசிகர்கள் மத்தியில், ராஜமவுலி இயக்கிய படம் என்றாலே, பிரம்மாண்டத்துக்கு குறை இருக்காது, என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்து வருகிறது. பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோரை தொடர்ந்து, முன்னணி ஹீரோக்களில் ஒருவரான மகேஷ்பாபு, இயக்குனர் ராஜமவுலியின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில், இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் அடுத்து மகேஷ்பாபு நடிப்பில், அடுத்த படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகிறது.

'இண்டியானா ஜோன்ஸ்' போல ஆக்‌ஷன் அட்வென்சர் படம் என்றும், உலகம் முழுவதும் படமாக்கப்பட இருப்பதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார் ராஜமவுலி. இதனால் அதற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களை போல இல்லாமல், இது வேறுமாதிரியான ஒரு கதைக்களத்தில் உலக நாடுகளில் படமாக்கப்பட இருப்பதால், படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Updated On: 19 Oct 2022 7:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...