சிவகார்த்திகேயன் செய்த துரோகம் என்ன? இப்படியா நடந்தது?
சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாக டி இமான் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
HIGHLIGHTS
சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் அவருடன் இனிமேல் எந்த படத்திலும் இணைந்து பணிபுரிய மாட்டேன் என்றும் இசையமைப்பாளர் டி இமான் தெரிவித்துள்ளார். இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து படம் செய்யமாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளது வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் அப்படி என்ன துரோகம் செய்துவிட்டார் என இணையதளத்தில் பல்வேறு நபர்களும் பேசி வருகின்றனர். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் அரசல்புரசலாக வெளியான தகவலின் அடிப்படையில் அவர் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு துரோகத்தை செய்திருப்பதாக இமான் நினைப்பது தெரியவந்தது.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய இமான் சிவகார்த்திகேயன் குறித்து இப்படி பேசியுள்ளார். அவர் தெரிவித்த கருத்துகள் இதோ
தனிப்பட்ட காரணங்களால் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. எனவே எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது. ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அதற்கான அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது
மேலும் யூடியூப் சேனலில் பேட்டி எடுப்பவர் நீங்கள் அவரிடம் ஏன் நேருக்கு நேராக கேட்டுவிடக் கூடாது. நான் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறேன் உன்னை நம்பி என் வீட்டில் சேர்த்தேனே உன்னை அளவுக்கு அதிகமாக நம்பியதால் நீ இப்படி செய்தாயா என கேட்கலாமே என்று அந்த தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த இமான் நான் கேட்டுவிட்டேன் என்று கூறினார்.
சரி அப்படி என்ன துரோகம் இழைத்தார் ஏன் உங்களால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என்று கேட்க, அதற்கு இமான் அளித்த பதில் குழந்தைகள் குறித்ததாக இருந்தது. குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நான் இதனை மூடி மறைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிகராக அறிமுகமான புதியதில் இமான் இசையமைத்த பாடல்களே சிவகார்த்திகேயனின் முகவரியாக இருந்தது. இப்போதும் இமான் பாடல்கள் மூலம்தான் பல குழந்தைகளைக் கவர்ந்தார் சிவகார்த்திகேயன்.
ஊரான ஊருக்குள்ள, போ போ போ, ஜல் ஜல் ஜல் ஓச, ஊதா கலரு ரிப்பன், பார்க்காத பார்க்காத, இந்த பொண்ணுங்களே இப்படித்தான், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா, உன் மேல ஒரு கண்ணு, சீமராஜா, வரும் ஆனா வராது, ஒன்ன விட்டா, எங்க அண்ணன், உன் கூட வே பொறக்கணும், மயிலாஞ்சி, காந்த கண்ணழகி என இத்தனை பாடல்கள் மூலம் சிவகார்த்திகேயனை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தவர் இமான்.
சிவகார்த்திகேயனுக்கு இமான் இசையமைத்த படங்கள்
- மனம் கொத்தி பறவை
- வருத்தப்படாத வாலிபர் சங்கம்
- ரஜினி முருகன்
- சீம ராஜா
- நம்ம வீட்டுப் பிள்ளை
இப்படி அண்ணன் தம்பியாக பழகிய சிவகார்த்திகேயனும் இமானும் பிரிவதற்கு காரணம் இமானின் மனைவி என்று கிசுகிசுக்கப்படுகிறது. அவரால்தான் இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் விரிசல் உண்டானது என்றும் கூறப்படுகிறது. ஆனால் என்ன நடந்தது என்பதை இமானே வாயைத் திறந்து சொன்னால்தான் தெரியவரும். மேலும் இது குறித்து சிவகார்த்திகேயன் தரப்பிலும் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை. அவரது தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டால்தான் நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.