/* */

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்களுடன் வலம் வரும் நடிகை கங்கனா ரனாவத்

chandramukhi 2 movie update- ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு தளத்துக்கு, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்களுடன் நடிகை கங்கனா ரனாவத் வருவது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்களுடன் வலம் வரும் நடிகை கங்கனா ரனாவத்
X

chandramukhi 2 movie update-நடிகை கங்கனா ரனாவத்

chandramukhi 2 movie update, chandramukhi 2 kangana ranaut- பி.வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி மெகா ஹிட் ஆன படம் 'சந்திரமுகி'. இப்பொழுது இதன் இரண்டாம் பாகத்தை பி.வாசு எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினி 'வேட்டையன்' என்ற கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருப்பார். இப்பொழுது இதன் இரண்டாம் பாகத்தில் 'வேட்டையன்' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

ராகவா லாரன்ஸ் முந்தைய படங்களான 'முனி', 'காஞ்சனா' என த்ரில்லர் மூவியில் நடித்து சூப்பர் ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து இப்படத்திலும் வேட்டையனாக மிரள வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சந்திரமுகி கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இவர் தமிழில் 'தாம் தூம்' என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருந்தார்.


இதையடுத்து அவர் அரவிந்த்சாமி உடன் 'தலைவி' என்ற படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து நடித்திருந்தார். தற்போது இவர் முதல் இயக்கத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து ஹிந்தியில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் தமிழ் படம் 'சந்திரமுகி 2'.

இப்பொழுது இந்த நடிகையால் சூட்டிங் ஸ்பாட்டில் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு வருகிறதாம். இவர் எங்கே போனாலும் எப்பொழுதுமே ஒரு கூட்டத்துடன் தான் போவாராம். இப்படி படப்பிடிப்பிற்கும் ஜிம் பாய்ஸ், மேக்கப் மேன், என இவர் கூடவே இந்த கூட்டத்தையும் ஏற்பாடு செய்து கூட்டிட்டு வருவாராம். அது மட்டுமல்லாமல், இவரின் பாதுகாப்பிற்காக சி ஆர் பி எப் வீரர்கள் என்று நான்கு பேர் துப்பாக்கியுடன் எப்பொழுதுமே இவரை சுற்றி இருப்பார்கள்.


இதெல்லாம் பார்த்த பட குழுவினர் விசாரிக்கும் போது, எல்லாமே இவருடைய ஏற்பாடு தான் என்று தெரியவந்தது. இந்த ஏற்பாட்டின் பின்னணி இவர் வாயால் நிறைய பிரச்சனைகளை தேடிப்போய் மாட்டிக் கொள்வாராம். அதனால் இவரின் பாதுகாப்பு கருதி சி ஆர் பி எப் வீரர்களுடன் சூட்டிங் வந்து கொண்டிருக்கிறார். இதனால் படக் குழுவில் நிறைய குளறுபடிகள் நடந்து வருகிறது.வழக்கமாக, சினிமாவில்தான் இதுபோன்ற அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெறும். துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன் ஹீரோ, அல்லது வில்லன் காணப்படுவது போல, காட்சிகள் இருக்கும். ஆனால், நிஜத்தில் படப்பிடிப்பு தளத்துக்கு, படத்தின் கதாநாயகி கங்கனா ரனாவத் துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன் பாதுகாப்பாக வலம் வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பட குழுவினர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த காரணத்தினாலே படப்பிடிப்பிற்கு பெரும் பின்னடைவாக இருக்கிறதாம். இந்த பிரச்சனை எல்லாம் கடந்து இயக்குனர் சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை வெற்றிகரமாக முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 13 Jan 2023 6:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?