/* */

ஒவ்வொரு வாரமும் 6 பேர்... கேப்டன பகைச்சிக்கிட்டா...!?

கேப்டனை பகைத்துக் கொண்டால் அவ்வளவுதான். பிக்பாஸ் போட்டு கடுமையான ரூல்ஸ்

HIGHLIGHTS

ஒவ்வொரு வாரமும் 6 பேர்... கேப்டன பகைச்சிக்கிட்டா...!?
X

பிக்பாஸ் தமிழ் சீசன் 7ன் முதல் நாளே அதிரடியாக முடிவுகள் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. அதாவது 6 பேரை வேறொரு வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் பிக்பாஸ். அவர்களுக்கு சில விதிமுறைகளையும் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இப்போது துவங்கியுள்ளது. நேற்று முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல்நாளான அறிமுகநாளில் கமல்ஹாசன் அனைவரையும் உள்ளே அனுப்பி வாழ்த்து தெரிவித்து விடைபெற்றார். இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு பல போட்டிகளை வைத்து சோதிப்பார். வழக்கமான நடைமுறை இதுவாக இருந்தாலும் இப்போது வீட்டில் நுழைந்தவுடனேயே போட்டி தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7ல் பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 9 ஆண் போட்டியாளர்களும் 9 பெண் போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.

முதல் ஆளாக நுழைந்த கூல் சுரேஷ், அவருக்கு அடுத்து நுழைந்த பூர்ணிமா ரவியிடம் கேப்டன் பொறுப்பை கொடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரவீனா தாஹாவுக்கு பொறுப்பு கைமாறியது. அடுத்து வந்த போட்டியாளருடன் ஏற்கனவே இருக்கும் வீட்டுத் தலைவர் விவாதித்த தான் ஏன் சிறந்த தலைவராக இருக்க முடியும் என்பதை நிரூபித்து கேப்டன் பொறுப்பை பெற வேண்டும் என்பது பிக்பாஸின் ஆணை.

ஒரு வேளை இரண்டு பேருமே விட்டுக்கொடுக்காமல் போராடினால் அது நேரம் முடிந்தவுடன் அடுத்து வரும் போட்டியாளருக்கு சென்றுவிடும். இப்படியாக ஒருவர் மாறி ஒருவர் வந்து கடைசியாக வந்த விஜய் வர்மாவுக்கு இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர் பதவி கிடைத்தது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள புரோமோவில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.

தலைவர் விஜய் வர்மாவை அதிகம் கவராத 6 போட்டியாளர்களை இரண்டாவது வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். பிக்பாஸின் இந்த அதிரடி முடிவு முதல்நாளே பலரையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. என்றாலும் அவர்கள் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்து மற்ற விதிகளும் போடப்படும் என்று கூறப்படுகிறது.

  • ஐஸு
  • நிக்ஷன்
  • பவா செல்லதுரை
  • அனன்யா
  • வினுஷா
  • ரவீனா

இந்த ஆறு பேரும்தான் இன்னொரு வீட்டுக்கு அனுப்பபடுகிறார்கள். இதில் முக்கியமான ஒரு விதி என்னவென்றால் அவர்கள் 6 பேருக்கும் பிக்பாஸின் உதவி இருக்காது. அவர் குரலால் 6 பேரையும் வழி நடத்தமாட்டார் இவ்வளவு ஏன் பேசவே மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த மாதிரி ஒவ்வொரு வாரமும் 6 பேரைத் தேர்ந்தெடுத்து இன்னொரு வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். தேர்ந்தெடுப்பவர் கேப்டன்தான். இதனால் கேப்டனுக்கு ஹவுஸ்மேட்களுக்கும் முட்டிக்கொள்ளும்படி செட் செய்துள்ளார் பிக்பாஸ்.

தனியாக இருக்கும் குட்டி ஹவுஸ்மேட்களுக்கென்று சில கடுமையான விதிமுறைகளைக் கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

  • எந்த டாஸ்க்கிலும் பங்கு பெற கூடாது
  • ஷாப்பிங் போக கூடாது
  • மூன்று வேளை சாப்பாட்டையும் பிக்பாஸ் ஹவுஸ்மேட் முடிவு செய்வார்கள். அதைதான் சமைக்க வேண்டும்
  • பாத்ரூம் கிளீனிங், வெசல் கிளீனிங் வேலைகளை அவர்கள்தான் செய்ய வேண்டும்

என அதிரடி சட்டங்களைப் போட்டிருக்கிறார்கள்.

Updated On: 2 Oct 2023 6:52 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  4. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  5. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  6. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!