இந்த வாரம் 'பிக்பாஸ்' வீட்டை விட்டு வெளியேறுபவர் இவரா?
bigg boss eviction this week in tamil-பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து, இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
HIGHLIGHTS
bigg boss eviction this week in tamil, bigg boss today elimination tamil- விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இருக்கும் 6 போட்டியாளர்களில் வெளியேற உள்ள போட்டியாளர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது விஜய் டிவியில் 'பிக்பாஸ்' ஆறாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் துவக்க நிலையில், மொத்தம் 21 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். வாரந்தோறும் போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது ஏழு போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் இருக்கின்றனர். இன்னும் ஒரு வாரத்தில், இறுதிகட்டத்தை நெருங்கும் இந்நிகழ்ச்சியில், 'டைட்டில் வின்னர்' தேர்வு செய்யப்பட உள்ளார்.
'டிக்கட் பினாலே' வுக்காக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால், அமுதவானன் நேரடியாக பைனலுக்கு சென்றுள்ளார். பின்பு அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, ஏடிகே என ஆறு பேர் இந்த வார நாமினேஷனில் இருக்கின்றனர். கடந்த வாரம், ரக்சிதா வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிகழ்ச்சியில், இறுதி போட்டி வரை ரக்சிதா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெளியேறியது, 'பிக்பாஸ்' ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. அதே போல், இந்த ஆறாவது சீசனில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர் தனலட்சுமி. கடந்த சில வாரங்களுக்கு முன்பே அவர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனலட்சுமி இருக்கும் வரை, வீட்டுக்குள் நடந்த போட்டிகளில் ஓரளவு பரபரப்பும், விறுவிறுப்பும் இருந்தது. அதே போல், மணிகண்டாவும் போட்டிகளில் அதிக 'ரிஸ்க்' எடுத்து விளையாடினார். ஆனால், இப்போது வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள், வெறுமனே லிவிங் ஏரியாவில் அமர்ந்து, மணிக்கணக்கில் பேசியே பொழுதை போக்கி விடுகின்றனர். கடந்த ஐந்து சீசன்களில் இருந்த அளவுக்கு இந்த ஆறாவது சீசனில் அவ்வளவு சுவாரசியமும், பரபரப்பும் இல்லை என்றே, பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வாரம் வழக்கம் போல் அசீம் மற்றும் விக்ரமன் அதிகமான வாக்குகளைப் பெற்று அடுத்தடுத்து காப்பாற்றப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்து 3 மற்றும் 4வது இடங்களை ஷிவின் மற்றும் கதிரவன் பிடித்துள்ள நிலையில், மைனா மற்றும் ஏடிகே குறைவான வாக்குகளைப் பெற்று கடைசி இடத்தில் இருக்கின்றனர்.
இதனால் இந்த வாரம் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்பட உள்ளார். அதிலும் ஏடிகே தான் குறைவான வாக்கினைப் பெற்று கடைசி இடத்தில் உள்ளதால், அவரே இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீதம் இருக்கும் 6 பேரில் இருந்து ஒருவர் தான் இந்த பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அசீம் மற்றும் விக்ரமன் இருவரில் ஒருவர் வரவே அதிக வாய்ப்பு இருக்கிறது.