/* */

ரக்‌ஷிதாவின் பழைய ஆடைகளை வாங்கி அணிந்தேன் - 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் 'மைனா' நந்தினி உருக்கம்

Bigg Boss 6 Myna Life Story - ஆரம்ப காலத்தில், டிவி சீரியலில் நடித்த போது, நல்ல ஆடைகள் இல்லாத நிலையில், சக நடிகையான ரக்‌ஷிதாவின் பழைய ஆடைகளை வாங்கி அணிந்ததாக, நடிகை 'மைனா' நந்தினி உருக்கமாக கூறினார்.

HIGHLIGHTS

ரக்‌ஷிதாவின் பழைய ஆடைகளை வாங்கி அணிந்தேன் - பிக்பாஸ் நிகழ்ச்சியில் மைனா நந்தினி உருக்கம்
X

bigg boss 6 myna life story- நடிகை ‘மைனா’ நந்தினி

Bigg Boss 6 Myna Life Story -விஜய் டிவி சீரியல் நடிகையாக 'மைனா' நந்தினி மிகவும் பிரபலம். பிறகு, நடிகர் அருள்நிதி - சுனைனா நடித்த 'வம்சம்' படத்தில், கதாநாயகியின் தோழியாக அறிமுகமானார். இந்த படத்தில், கஞ்சா கருப்பு இவருக்கு ஜோடி. துாரத்தில் காட்டுக்குள் இருக்கும் சுனைனாவை, ' ஏ மலரு புள்ளே' என, இவர் கிராமத்து வழக்கில் கூவி அழைப்பது, பலத்த வரவேற்பை பெற்ற காட்சியாக அமைந்தது. அதன்பின், பிரபலமான இவர், 'கலக்கப்போவது யாரு' சீசன்களில், நடுவர்களில் ஒருவராக பங்கேற்று மிக பிரபலமானார். தொடர்ந்து, படங்களிலும் நடித்து வருகிறார்.


'மைனா' நந்தினி தற்போது, 'பிக்பாஸ்' ஆறாம் சீசனில் போட்டியாளராக, ஒருவாரம் கழிந்த நிலையில் வந்திருக்கிறார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில், பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் தங்களை பற்றி, தங்களது கடந்த கால வாழ்க்கையை பற்றி சொல்லும் விதமாக, 'டாஸ்க்' நடந்து வருகிறது. இதில், 'மைனா' நந்தினி, அவர் கடந்து வந்த பாதை பற்றி கூறி இருக்கிறார். அப்போது மற்ற போட்டியாளர்கள் பஸ்ஸரை அழுத்தியதால், அவர் தன்னை பற்றி முழுமையாக பேசாமல், பேச வாய்ப்பின்றி வெளியில் வந்துவிடுகிறார்.

அதன் பின் மற்ற சில போட்டியாளர்களிடம் பேசிய 'மைனா' நந்தினி, தான் ஆரம்பகாலத்தில் சந்தித்த விஷயங்கள் பற்றி கூறி இருக்கிறார். அவர் கூறிய சில விஷயங்கள் பார்வையாளர்களை உருக்குவதாக இருந்தது.

சென்னையில் லோக்கல் ரயில் 11 மணிக்கு மேல் வராது என, எனக்கு தெரியாது. ஒருமுறை அப்படி ரயில்வே ஸ்டேஷனில் இரவில் தூங்கினேன். வாய்ப்புக்காக, பல 'டிவி' சேனல்களை அணுகினேன். ஆனால் வாட்ச்மேனை தாண்டி, உள்ளே செல்லவே முடியாது. கேட்டிலேயே நிற்க வைத்துவிடுவார்கள். அதன் ஒரு 'அடல்ட் ஷோ' தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் ஷோ அது. அந்த ஷோவில் இருந்தால், என் மொத்த இமேஜும் மாறிவிடும் என நண்பர்கள் சொன்ன அட்வைசுக்கு பிறகு, ஒரு மாதத்தில் அதில் இருந்து வெளியில் வந்தேன்.


அதன்பின்புதான், அதிகம் மெனக்கெட்டு போராடி, நண்பர்கள் மூலமாக விஜய் டிவியில் 'சரவணன் மீனாட்சி' தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 100 ரூபாய்க்கு 4 ட்ரெஸ் எடுத்து தைத்துக்கொண்டேன். அதை வைத்தே சீரியலை நடித்து முடித்தேன். என்னிடம் நல்ல ட்ரெஸ் இல்லாததால், ரக்‌ஷிதாவின் பழைய ட்ரெஸ் எல்லாம் எனக்கு கொடுத்துவிடுவார். அதை வாங்கி அணிந்துகொள்வேன்.


அந்த சீரியலில், எனக்கு ஒரு நாளைக்கு 1500 ரூபாய் சம்பளம். மாதம் 5 நாள் ஷூட்டிங் இருக்கும். அதை வைத்து, 7500 ரூபாய் கிடைக்கும். அப்போது ஒரு ஆஸ்பெஸ்ட்டாஸ் சீட் வீட்டில் வாடகைக்கு சென்றேன். அப்பா ஹைதராபாத்தில் இருந்து இங்கே வந்துட்டார். இருவரும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில்தான் சந்திப்போம்.

இப்படி ஆரம்ப காலகட்டத்தில் சந்தித்த பிரச்சனைகளை வெளிப்படையாக 'மைனா' நந்தினி கூறி இருக்கிறார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Oct 2022 7:29 AM GMT

Related News