/* */

ரசிகர்களை சந்திக்க மீண்டும் வரும் 'பிச்சைக்காரன்'

விஜய் ஆண்டனி நடிப்பு மற்றும் இயக்கத்தில், 'பிச்சைக்காரன் 2', அடுத்த ஆண்டில் வெளிவர இருக்கிறது. இதற்கான, 'பிச்சைக்காரன் -2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

ரசிகர்களை சந்திக்க மீண்டும் வரும் பிச்சைக்காரன்
X

நடிகர் விஜய் ஆண்டனி இயக்கத்தில், அடுத்த ஆண்டில் வௌிவருகிறது ‘பிச்சைக்காரன் 2 ‘

இதுபோன்ற ஒரு தலைப்பில் வைக்கப்பட்ட படத்தில் நடிக்கவே, நடிகர்கள் யோசிப்பது வழக்கம். 'பிச்சைக்காரன்' என்ற படத்தின் பெயர் துவக்கத்தில், கடுமையாக விமரிசிக்கப்பட்டது. பலரும் கேலி, கிண்டல் செய்தனர். ஆனால், படம் கிண்டல், கேலி செய்தவர்களை யோசிக்க வைத்தது. இதுதான் இதற்கு சரியான தலைப்பு எனவும் பேச வைத்தது. இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் 'பிளாக்பஸ்டர்' வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.


தலையில் அடிபட்ட கதாநாயகனின் தாய், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவார். அதே வேளையில், மிகப்பெரிய கோடீஸ்வரனாக, வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் கதாநாயகன், தாயின் நிலை கண்டு பதறுவார். 'உன் தாய் உயிர் பிழைக்க வேண்டும் என்றால், ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள், பிச்சைக்காரனாக நீ வாழ வேண்டும்,' என்று ஒரு சாமியார் கூறுவார். அதன்படி, சென்னையில் கோவில் வாசலில் கதாநாயகன் பிச்சைக்கார கும்பலில் சேர்ந்து, அவர்களில் ஒருவராக பிச்சை எடுப்பார். பிச்சை எடுத்த நாணயங்களை, தினமும் கோவில் உண்டியலில் போடுவார்.


மிக வித்யாசமான இந்த கதையில், விஜய் ஆண்டனி சிறப்பாக நடித்திருந்தார். 'ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் தாள்களை ஒழித்து விட்டு, 100, 50 ரூபாய் தாள்களை அதிகமாக புழக்கத்தில் விட வேண்டும். அப்போதுதான் நாட்டில் லஞ்சம், ஊழல் இருக்காது,' என்று ஒரு பிச்சைக்கார நேயர், எப்.எம் ரேடியோவுக்கு அழைத்து பேசுவது போன்ற ஒரு காட்சி, இந்த படத்தில்தான் இடம்பெற்றது. இது, பலத்த பாராட்டை பெற்றதோடு, இந்தியாவில் மத்திய அரசு, பணம் மதிப்பிழப்பு செய்து அறிவித்த காலகட்டத்தின் போது, இந்த காட்சி இன்னும் அதிகமான கவனத்தை, மக்கள் மத்தியில் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படம், அடிக்கடி டிவி சேனல்களில் திரையிடப்படும் முக்கிய படங்களில் ஒன்றாகி விட்டது.

பிச்சை எடுக்கும் மனிதர்களின் விளிம்பு நிலை வாழ்க்கை, தினமும் மூன்றுவேளை உணவுக்காக அவர்கள் படும் துன்பங்கள் மிக அழகாக சொல்லப்பட்ட படம் இது. மேலும் காதல், அடிதடி, பக்தி, காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து தரப்பட்ட ஒரு படமாகவும் 'பிச்சைக்காரன்' அமைந்தது. அதனால், இந்த படம் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரண்டாம் பாகமாக உருவாகி, மீண்டும் ரசிகர்களை சந்திக்க வருகிறான் 'பிச்சைக்காரன்'


ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிச்சைக்காரன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல், படத்தை இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம், அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'பிச்சைக்காரன் -2' படம் 2023-ம் ஆண்டு கோடையில் வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும்'பிச்சைக்காரன் -2' திரைப்படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதன் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 Dec 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்