/* */

ரோஜா சீரியல் அர்ஜூன் இப்ப பாரதி கண்ணம்மாவில்... இன்று முதல்!

Bharathi Kannamma Season 2 Hero Heroine-போட்டியாக இருந்த சீரியலுக்கே கதாநாயகனாக நுழைந்திருக்கிறார் ரோஜா சீரியல் ஹீரோ சிபு சூர்யன். இவர்தான் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடிக்கிறார். இன்று முதல் பாரதி கண்ணம்மா ஒளிபரப்பப்படுகிறது.

HIGHLIGHTS

ரோஜா சீரியல் அர்ஜூன் இப்ப பாரதி கண்ணம்மாவில்... இன்று முதல்!
X

Bharathi Kannamma Season 2 Hero Heroine-போட்டியாக இருந்த சீரியலுக்கே கதாநாயகனாக நுழைந்திருக்கிறார் ரோஜா சீரியல் ஹீரோ சிபு சூர்யன். இவர்தான் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடிக்கிறார். இன்று முதல் பாரதி கண்ணம்மா ஒளிபரப்பப்படுகிறது.

சன்டிவியின் பிரைம் டைம் சீரியல் என்றால் அது ரோஜா தான். எப்போதும் டிஆர்பியில் டாப்பாக வரும் சீரியலான ரோஜாவில் நாயகனாக நடித்திருந்தவர் சிபு சூர்யன். பிரியங்கா அவருக்கு ஜோடியாக ரோஜாவாக நடித்திருந்தார். முடிந்தவரை இழு இழுவென்று இழுத்து கொண்டு வந்த அந்த சீரியலை கடந்த மாதம் திடீரென்று முடித்து சுபம் போட்டுவிட்டார்கள்.

என்னதால் சீரியல் முடிந்திருந்தாலும் சன்டிவியின் பிரைம் டைம் சீரியல் ஜோடியான சிபுவும், பிரியங்காவும் சேர்ந்தோ அல்லது வேறு வேறு சீரியலிலோ மீண்டும் தலையைக் காட்டுவார்கள் என பலரும் நினைத்திருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக சிபு சூர்யன் தனது போட்டி நிறுவனமான விஜய் டிவிக்கு தாவியுள்ளார். சமீப கால மாக இதுபோன்று தொலைக்காட்சி தாவல்கள் சகஜம்தான் என்றாலும் மிக முக்கிய நபர்களை அவ்வளவு சீக்கிரம் சேனல்கள் வெளியில் விடாது.

அர்ஜூன் சாராக கலக்கியவர் இனி டாக்டர் பாரதியாக கலக்கவிருக்கிறார். உண்மையில் பாரதி கண்ணம்மா சீசன் 2வில் பாரதி டாக்டரா இல்லை வேறு எதும் தொழில் செய்பவரா தெரியவில்லை. ஆனால் பாரதியின் காதலி, மனைவியாக நடிக்கப் போவது அதே கண்ணம்மாதான். கண்ணம்மாவாக நடிக்கவிருக்கும் வினுஷா தேவிதான். ரோஷினி ஹரிப்ரியன் நடித்திருந்தால் இன்னும் பக்காவாக இருந்திருக்கும் என பலரும் பேசி வருகின்றனர்.

பாரதியின் காதல் கதைக்கு எண்ட் கார்டு போட்டு, காதல் தோல்வியிலிருந்த பாரதியை எப்படியாவது தான் திருமணம் செய்துகொள்ள நினைத்தார் வெண்பா. ஆனால் கண்ணம்மா முந்திக்கொண்டார். முதலில் யாருக்கும் பிடிக்காத கண்ணம்மா பின் அனைவராலும் நேசிக்கப்படும் பெண்ணாக மாறிவிட்டால். ஒரு கட்டத்தில் எல்லாருக்கும் பிடித்துப் போக, பாரதிக்கு சந்தேகப் பேய் வந்து பிடித்துக் கொண்டது.

வெண்பாவின் பிடியில் இருந்த பாரதி, எப்படி விடுபட்டு கண்ணம்மாவைப் புரிந்துகொண்டான் என்பதைதான் முதல் பாகத்தில் அரைத்து அரைத்து சுட்டுக் கொடுத்தார்கள். இனி இரண்டாவது சீசனுக்கு என்ன கதை வைத்திருக்கிறார்கள் தெரியவில்லை. இன்று இரவு 9 மணிக்கு முதல் எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. பார்த்து தெரிந்துகொள்வோம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 21 March 2024 9:16 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  2. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  3. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  4. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  5. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  6. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  7. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...