/* */

baakiyalakshmi gopi become a grandfather -கோபியை வெளுத்து வாங்கிய ராதிகா..! இப்படியா அவமானப்படணும்..?

Baakiyalakshmi Gopi Become a Grandfather -கோபி தனது வயதை மறந்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டு ஜாலியாக வாழ்க்கையயைத் தொடங்குகிறார். வாழவிட்டிருவோமா..??

HIGHLIGHTS

baakiyalakshmi gopi become a grandfather -கோபியை வெளுத்து வாங்கிய ராதிகா..! இப்படியா அவமானப்படணும்..?
X

Baakiyalakshmi Gopi Become a Grandfather -விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்கு பிறகு பாக்யாவின் குடும்பத்தை சீண்ட வேண்டும் என்பதற்காகவே ராதிகா அதே தெருவில் கோபியுடன் வசிக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் திருமணத்திற்குப் பிறகும் வாழ்க்கையில் பெரும் துன்பத்தை அனுபவித்து வரும் கோபி, தற்போது தாத்தாவாகிவிட்டார். அவர் தாத்தா ஆனதை வைத்து பாக்கியலட்சுமி குடும்பமே கோபியை உண்டு இல்லையென அவரை கலாய்த்து வருகிறது.

புது மாப்பிள்ளை ஆன கோபி தனக்கு வயதானதை மறந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சும்மா குஜாலாக வாழ்க்கையைத் தொடங்குகிறார். இதை கொஞ்சமும் விரும்பாத கோபியின் அப்பா செழியனுக்கு குழந்தை பிறக்கப் போகிறது, அதன் பிறகு நீ தாத்தாதான் என்று கிண்டல் செய்கிறார்.


இப்படி அக்கம் பக்கத்தினரிடம் அசிங்கப்பட்டுப் போன கோபியை, ராதிகா தேற்றி ஆறுதல் கூறாமல் அவரும் சேர்ந்து கோபியைத் திட்டுகிறார். 'அடக்கடவுளே இப்படி என் வாழ்க்கையே நரகமா ஆகிப்போச்சே' என்று கோபி தனக்குத்தானே புலம்புகிறார். ஆனாலும் பாருங்க, பாக்யாவின் முன்பு ராதிகா கோபியுடன் சந்தோசமாக வாழ வேண்டும் என்றுதான் கூறினார்.

ஆனால்,ராதிகாவோ அல்லது கோபியோ எதிர் வீட்டில் வந்து குடியேற வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. இப்படி பாக்யாவின் குடும்பத்தின் சந்தோஷத்தை பார்த்து வயிறு எரியவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் இந்த கோபி தான் என்று ராதிகா அவரை கரித்துக் கொட்டுகிறார். அந்த கோபத்தையெல்லாம் வெளிக்காட்டுவதற்காக பொம்மை போன்ற வீட்டில் இருக்கும் பொருட்களையெல்லாம் தூக்கி வீசுகிறார்.

இதுமட்டுமின்றி ராதிகாவின் மகள் இனியா உடன் நெருங்கி பழகியவர் என்பதால் பள்ளியில் பழகிய தோஷத்தில் அவருடன் பேச முயற்சிக்கிறார். அப்போது இனியா ராதிகாவின் மகளை தள்ளி விடுகிறார்.


இப்படி அப்பா மீது இருக்கும் கோபத்தை ராதிகாவின் மகள் மீது காட்டும் இனியாவால் தன்னுடைய மகளின் மனம் புண்படுகிறதே என ராதிகா கண் கலங்குகிறார். இப்படி ஒட்டுமொத்தமாக இருக்கும் கோபத்தை எல்லாம் ராதிகா கோபியிடம் வெளிப்படுத்துகிறார். மேலும் ஜெனி கர்ப்பமாக இருப்பதால் எழிலின் தயாரிப்பாளரின் மகள் ஷாமிலி வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்துச் செல்கிறார்.

பிறகு குடும்பத்தினர்,எழிலுக்கு ஷாமிலியை திருமணம் செய்து வைக்கலாம் என்கின்ற ஆசை ஏற்படுகிறது. ஆனால், எழில் ஏற்கனவே அமிர்தாவை விரும்புவதால் இப்போது வீட்டிற்கு வந்திருக்கும் ஷாமிலியால் அவர்களது திருமணத்தில் குளறுபடி ஏற்படப்போகிறது. இருப்பினும் குடும்பத்தை சமாளிக்கும் எழில் எப்படியோ கடைசியில் அமிதாவை தான் திருமணம் செய்யப் போகிறார்.

இப்படியாக பாக்கியலட்சுமி சீரியல் கதை போய்க்கொண்டு இருக்கிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Nov 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்