/* */

ஏக வசனத்தில் பேசிய அஸீம் - ஆவேசப்பட்ட ஆயிஷா

Ayesha Fight With Azeem - 'துாங்குவதை தவிர வேறெதுவும் செய்வதில்லை,' என சக போட்டியாளர் ஆயிஷாவை விமர்சித்த அஸீம், ஒரு கட்டத்தில் 'கத்தாதடீ, போடீ' என ஏக வசனத்தில் பேசியது, 'ப்ரோமோ' மூலம் வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

ஏக வசனத்தில் பேசிய அஸீம் - ஆவேசப்பட்ட ஆயிஷா
X

Ayesha fight with azeem -  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸீம், ஆயிஷா

Ayesha Fight With Azeem -இதுவரை அமைதியான மனிதராக காட்சியளித்த அஸீம், 'பிக்பாஸ்' வீட்டில் போட்டியாளர்களிடையே சின்ன சின்ன பிரச்னைகளால் வாக்குவாதம் ஏற்படும் போதெல்லாம் சமாதானம் பேசி, அவர்களை 'கூல்' செய்தார். இப்போது, அவரே சீறும் புலியாக மாறி, சக போட்டியாளரான ஆயிஷாவை 'போடீ' என, ஏக வசனத்தில் பேசிய ப்ரோமோ, 'பிக்பாஸ்' ரசிகர்களை திடுக்கிட வைத்துவிட்டது.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி 'பிக்பாஸ்'. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக துவங்கி, இரண்டு வாரங்களாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். முதல் வாரத்தில் தலைவராக ஜிபி முத்து தேர்வானார். தொடர்ந்து, அவ்வப்போது டாஸ்க்குகள் நடத்தப்படுகிறது. இடையிடையே போட்டியாளர்களுக்கு இடையே சிறுசிறு சண்டைகளும் நடக்கிறது. நேற்று தனலட்சுமிக்கும், அசல் கோளாறுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அஸீம், தனலட்சுமியை சமாதானப்படுத்தினார். அப்போது, விக்ரமன் பிரச்னையில் குறுக்கிட்டு குழப்பம் செய்ய, ஏடிகே அவரை சமாதானம் செய்தார்.

இந்த நிலையில், இன்று நடக்கும் ஒரு போட்டியின் 'ப்ரோமோ' வெளியாகி, பார்வையாளர்களை திடுக்கிட வைத்துள்ளது.

கார்டன் ஏரியாவில் வரிசையாக நிற்கும் 13 போட்டியாளர்களுக்கு எண்கள் தரப்பட்டுள்ளது. தரவரிசைப்படி போட்டியாளர்களை நிற்கச் சொல்ல, 'ஆயிஷா, அவர் வைத்திருக்கும் நம்பருக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லை,' என சக போட்டியாளரான அஸீம் கூறுகிறார்.


இதனால் ஆயிஷா அவரிடம் சத்தம் போட்டு, சண்டை போட ஒரு கட்டத்தில் அஸீம், ஆயிஷாவை 'கத்தாதடீ, போடீ' என தரக்குறைவாக பேச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது.


வரிசையாக நிற்கும் போட்டியாளர்களின் முன்னால் வந்து நிற்கும் அஸீம், ' இந்த எண்களை வைத்திருப்பவர்களுக்கு அதற்கான தகுதியே இல்லை. தகுதியே இல்லாதவர்கள் இங்கே நிற்கின்றனர். அதிலும் குறிப்பாக, பர்ஸ்ட், சிக்ஸ், மற்றும் நைன் என்ற எண்களை (அதாவது மகேஸ்வரி, விக்ரமன், ஆயிஷா ஆகிய மூவரையும் குறிப்பிட்டு) வைத்திருப்பவர்களுக்கு தகுதியே இல்லை என்கிறார். அப்போது, 'நான் தகுதியற்ற ஆள்' என்று எப்படி சொல்கிறீர்கள்? என, ஆவேசமாக முன்னால் வந்து, அஸீமிடம், ஆயிஷா கேட்கிறார். அதற்கு அஸீம், 'நீ வந்ததில் இருந்து, துாங்குவதை தவிர என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' என்கிறார். 'நீங்கள் துாங்குவதே இல்லையா?' என, ஆவேசமாக ஆயிஷா கேட்க, 'கத்தி பேசாதே' என, அஸீம் கண்டிக்கிறார். 'நான் அப்படித்தான் சவுண்டாக பேசுவேன்' என ஆயிஷா சொல்ல, 'சத்தமா பேசாதடீ, போடீ' என கோபமாக சொல்கிறார் அஸீம். 'எதற்காக, என்னை மரியாதை இல்லாமல் வாடி போடி என பேசுகிறீர்கள்?' என, ஆயிஷா ஆவேசமாக கேட்பதோடு, அந்த 'ப்ரோமோ' முடிவடைகிறது.

இதுவரை அமைதி காத்த அஸீம், திடீரென ஆயிஷாவை தரக்குறைவாக பேசியது நிகழ்ச்சியை பரபரப்படைய வைத்துள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Oct 2022 11:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!