/* */

சூர்யாவுக்கு பதிலாக 'வணங்கான்' படத்தில் அதர்வா?

பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தில், சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அதர்வா நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

HIGHLIGHTS

சூர்யாவுக்கு பதிலாக  வணங்கான் படத்தில் அதர்வா?
X

பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தில் அதர்வா நடிப்பதாக தகவல்.

'வணங்கான்' படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக பாலா அறிவித்த நிலையில், நடிகர் அதர்வா நடிக்க வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் சூர்யா நடித்து வந்தார். முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பில் இருந்து சூர்யா திடீரென்று வெளியேறினார். இதனால் படவேலைகள் நிறுத்தப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. தற்போது சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதனால் 'வணங்கான்' படம் கைவிடப்பட்டு விட்டதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.


இந்நிலையில், 'வணங்கான்' படத்தில் இருந்து, நடிகர் சூர்யா விலகி விட்டதாக பாலா அறிவித்துள்ளார். ஆனாலும் 'வணங்கான்' படப்பிடிப்பு பணிகள் தொடரும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இதனால் சூர்யாவுக்கு பதில் 'வணங்கான்' படத்தில் நடிக்கப்போவது யார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவியது. ஆர்யா நடிக்கலாம் என்று துவக்கத்தில் பேசப்பட்டது.

ஆனால், நடிகர் அதர்வா நடிக்க வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதர்வாவிடம் தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாலா இயக்கிய 'பரதேசி' படத்தில் அதர்வா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பல படங்கள், நட்சத்திர செல்வாக்கில் நடிகர்களுக்காக அந்த படம் அதிக நாட்கள் ஓடி வெற்றி பெறும். ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களை அந்த வகையில் சேர்க்கலாம். ஆனால், சில படங்கள் இயக்குநர்களுக்காக ஓடும். ஏனெனில், அந்த அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வித்தியாசமான இயக்குநர்களாக அவர்கள் இருப்பார்கள். ஏனெனில், அவர்களின் இயக்கம், சினிமாவை அடுத்த இடத்துக்கு கொண்டு செல்வதாக இருக்கும்.


அந்த வகையில் கே. பாலசந்தர், மணிரத்னம், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா போன்றவர்கள் முக்கியமானவர்கள். அதுபோல இப்போது பாலா, அமீர், மிஷ்கின், ராம், வெற்றி மாறன், மாரி செல்வராஜ், ஏ ஆர் முருகதாஸ், செல்வராகவன், சமுத்திரக்கனி, சசிக்குமார் போன்றவர்கள் கவனிக்கப்படும் இயக்குநர்களாக உள்ளனர்.


அந்த வகையில் சேது, நான் கடவுள், பிதாமகன், பரதேசி, அவன் இவன் போன்ற படங்களை இயக்கி, தனது முத்திரையை பதித்தவர் பாலா. அதுவும் தேயிலை தோட்டத்தில், கொத்தடிமை மக்களின் துன்பங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'பரதேசி' படம், மிகவும் கவனிக்கப்பட்ட படமாக அமைந்திருந்தது. இதில், அதர்வா நடிப்பு, மிகவும் பிரமாதமாக இருந்தது. 'ஒட்டுப்பொறுக்கி' என்ற கேரக்டரில், 'நாயன்மாரே' என விளித்து, தண்டோரா போடும் கூலித்தொழிலாளி வேடத்தில், அதர்வா நடிப்பு பாராட்டை பெற்றது.

தற்போது நடிகர் சூர்யா, 'வணங்கான்' படத்தில் இருந்து விலகி விட்டதால், அதர்வாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 'பரதேசி' படம் போலவே ' வணங்கான்' படமும் மக்கள் மத்தியில் பேசப்படும் பாலா படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதர்வாவுக்கும் இது நல்ல ஒரு 'ஜாக்பாட்' என்றே சொல்லலாம்.

Updated On: 7 Dec 2022 8:16 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு