பெண்களை 'பேட் டச்' செய்யும் அசல் கோளார்- கண்டுகொள்ளாத கமல்; பார்வையாளர் அதிருப்தி
Asal Kolaar Bigg Boss -விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ் 6' நிகழ்ச்சியில், பெண் போட்டியாளர்களிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார் அசல் கோளார். ஆனால், இதை கண்டிக்காமல் கமல் இருப்பது, பார்வையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
HIGHLIGHTS
Asal Kolaar Bigg Boss -விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி முதல் வாரத்தில் இருந்தே பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. வீட்டில் போட்டியாளர்கள் இடையே சண்டை, மோதல் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், அசல் கோளார் சில பெண்களிடம் தகாத வகையில் தொட்டுபேசி, மோசமாக நடந்து கொண்டு இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம், அசல் கோளார் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மகேஸ்வரி, மைனா, ரக்ஷிதா, ஜனனி, நிவாஷினி, குயின்ஸி என தொடர்ந்து பெண்களிடம் மோசமான வகையில் நடந்துகொள்கிறார் அசல் கோளார்.
சில தினங்களுக்கு முன்னால், இரவு நேரத்தில் மூன்று பெண் போட்டியாளர்கள் பேசிக்கொண்டு நிற்கின்றனர். அங்குவந்த அசல் கோளார், நிவாஷினியை வெறித்து பார்த்தபடி நிற்கிறார். பின், நிவாஷினியிடம் ஏதோ பேசிவிட்டு. அப்படியே அவரை இடுப்போடு சேர்த்து பிடித்து, வாரி அணைத்து துாக்கியபடி அருகில் உள்ள சோபாவிலோ, பெட்டிலேயோ அவரை கிடத்திவிட்டு வருகிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும், சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களுடைய கடுமையான விமர்சனத்தையும் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து, நிவாஷிவியை நீச்சல் குளத்தியில் தூக்கி கொண்டு போட்டுவிடுவேன் என்றும் அசல் கோளார் கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அசல் கோளாறு நிவாஷினியை கடித்து இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கார்டன் பகுதியில், அமர்ந்திருக்கும் நிவாஷினி அருகில் நெருக்கமாக அமர்ந்திருக்கும் அசல்கோளார், இரண்டுமுறை நிவாஷினியின் தோள்பட்டை பகுதியில் இரண்டு முறை விட்டு விட்டு, கவ்வி கவ்வி பொய்யாக கடிக்கிறார், பின், இதை கண்டிக்கும் விதமாக கையைை நீட்டும் நிவாஷினியின் கைவிரல்களையும் கடிக்கிறார்.
இந்த காட்சி, பார்வையாளர்களை கடுமையாக எரிச்சலடைய செய்துள்ளது. சனி, ஞாயிறு தினங்களில் பஞ்சாயத்து பேச வரும் கமல்ஹாசன் இதை எல்லாம் கேட்கவே மாட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேவேளையில், அசல் கோளார் செய்யும் மன்மத லீலைகளின் காரணமாக, அவர் இந்தவாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக, தகவல் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷன் சாந்தி என்ற நிலையில், இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர். ஜனனி, ரக்சிதா, அசல் கோளார், மகேஸ்வரி, ஏடிகே, அசீம், ஆயிஷா என 7 பேர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை வாக்குகள் பதிவான நிலவரம் கசிந்துள்ளது. அதில் அதிகபட்சமாக 31 சதவீத வாக்குகள் பெற்று முதல் இடத்தில் ஜனனி உள்ளார். எனவே அவர் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட வாய்ப்பே இல்லை எனத் தெரிகிறது.
வாக்கு எண்ணிக்கை பட்டியலில் கடைசி இடத்தில் அசல் கோளார் இருப்பதாகவும் அவர் வெறும் 5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அசலை அடுத்து குறைந்த வாக்குகளை ஏடிகே பெற்றுள்ளார். எனவே, இந்த பேரில் ஒருவர் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதில் 'மன்மத லீலைகளின் ராஜா'வான அசல் கோளார் வெளியேற, அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2