/* */

Ethirneechal gunasekaran மாரிமுத்துவை காப்பாத்திருக்கலாம்! கதறிய பிஏ!

அன்றே நினைத்திருந்தால் மாரிமுத்துவைக் காப்பாற்றியிருக்கலாம் என பிஏ கதறி அழுததாக அப்பல்லோ ரவி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

Ethirneechal gunasekaran மாரிமுத்துவை காப்பாத்திருக்கலாம்! கதறிய பிஏ!
X

மாரிமுத்துவைக் காப்பாற்றியிருக்கலாம் எனவும் அதை செய்யாமல் விட்டதால்தான் அவர் இறந்துவிட்டார் எனவும் பிஏ கதறி அழுததாக மாரிமுத்துவுடன் நடித்து வந்த அப்பல்லோ ரவி பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகில் உதவி இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் மாரிமுத்து. இவர் கடந்த 8ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாரிமுத்து தேனி மாவட்டம் வருஷநாடு பகுதியைச் சேர்ந்தவர். வைரமுத்துவிடம் உதவியாளராக பணிபுரிந்த இவர், பின்னர் மணிரத்னம், ராஜ்கிரண், சீமான் உள்ளிட்டோரின் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். 'புலிவால்', 'கண்ணும் கண்ணும்' ஆகிய படங்களை இயக்கி நல்ல இயக்குநர் எனும் பெயரைப் பெற்றாலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவில்லை.

இயக்குநராக வெற்றிபெறாத மாரிமுத்து, நடிப்பில் கைசேர்த்தார். 2012ஆம் ஆண்டு முதல் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 2022ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான 'எதிர்நீச்சல்' சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

கடந்த 8ஆம் தேதி வளசரவாக்கத்தில் உள்ள டப்பிங் ஸ்டூடியோவில் 'எதிர்நீச்சல்' சீரியலுக்கான டப்பிங்கை கொடுத்தபோது மாரிமுத்துவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே அவர் தனது காரை ஓட்டிக்கொண்டு சூர்யா மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மாரிமுத்துவின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

'எதிர்நீச்சல்' சீரியலில் மாரிமுத்துவுடன் நடித்த அப்பல்லோ ரவி தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோது, மாரிமுத்துவின் வயிற்றில் ஏதோ மாற்றம் இருப்பதை அப்பல்லோ ரவி கவனித்தாராம். அவரிடம் வயிறு என்ன மேம்பாலம் மாதிரி ஆகிடிச்சி என்று கூறியுள்ளார். ஆனால் மாரிமுத்து அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்பல்லோ ரவி மருத்துவ துறையில் இருப்பதால், ஒரு செக்கப் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினாராம். ஆனால் மாரிமுத்து அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

மாரிமுத்து இறந்த நிலையில், அவரது பிஏ அப்பல்லோ ரவியிடம், "நீங்கள் அன்னைக்கு சொல்லியிருந்தீங்க. அப்போவே மருத்துவமனைக்கு போயிருந்தா இப்படி நடந்துருக்காதே" என்று அழுதபடி கூறினார். அப்பல்லோ ரவியும் இதை நினைத்து வருத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Updated On: 19 Sep 2023 8:07 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...