விஜய் பாட்டை விரும்பி கேட்ட அஜித்
‘மங்காத்தா’ படத்தின் ஷூட்டிங் நடந்த போது, விஜய் பாட்டை அஜித் விரும்பி கேட்டு, படத்தில் சேர்க்க சொன்ன தகவல், இப்போது வெளியாகி உள்ளது.
HIGHLIGHTS
'நேர்கொண்டப் பார்வை', 'வலிமை' படங்களைத் தொடர்ந்து, 'துணிவு' படத்தில் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம், இக்கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. 'நேர்கொண்டப்பார்வை' படம், பெரிய வெற்றி பெற்ற நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான 'வலிமை' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, 'வலிமை' படத்தில் விட்ட ஏமாற்றத்தை 'துணிவு' படத்தில் பிடித்துவிடும் முயற்சியில், படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு, 'துணிவு' ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
'துணிவு' படத்தை அடுத்து, அஜித் இரண்டு மாதம் சுற்றுலா செல்ல இருக்கிறாராம். அதன் பின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லைக்கா'வின் தயாரிப்பில் AK62 படத்தில் நடிக்க உள்ளார் அஜித். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க நாயகி தேர்வு தற்போது நடந்து வருகிறது. ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தெரிகிறது. இப்படம் வழக்கமான அஜித் படங்களை போல, சீரியஸாக இல்லாமல் 'பீல்குட்' படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
விஜய் நடித்த 'வாரிசு' படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், திடீரென அஜித்தின் 'துணிவு' படமும், பொங்கலுக்கு வருவதாக தகவல் வந்தது. எனவே, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் மோத உள்ளதால் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். கடைசியாக கடந்த 2014 ம் ஆண்டு 'ஜில்லா' மற்றும் 'வீரம்' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது.
இந்நிலையில் 'துணிவு' படத்தை முதலில் தீபவளிக்கு வெளியிட இருந்ததாகவும், பின்பு ஒரு சில காரணங்களால், அது நடக்கமுடியாமல் போனதால், பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட திட்டமிட்டதாகவும் இப்படத்தின் இயக்குனர் வினோத் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவரும் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்படுகின்றனர். ஆனால், இவர்கள் இருவருக்குள் நல்ல நட்பு இருந்து வருகிறது.
அதற்கு எடுத்துக்காட்டாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறிய தகவல் என்னவென்றால், 'மங்காத்தா' படத்தில் ஒரு காட்சியில் விஜய் நடித்த 'காவலன்' பட பாடல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும். அதற்கு காரணம் அஜித் தான். ஒருமுறை அந்த காட்சியை எடுக்கும்போது, பின்னால் பாட்டு ஓடிக்கொண்டிருந்தால், நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில், அஜித்தான் 'தம்பி விஜய் பாட்டை போடுங்க,' என்றார். இந்த தகவலை வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில், நீண்ட காலமாகவே, இந்த நடிகர் போட்டி நடந்து வருகிறது. எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், விக்ரம் - சூர்யா என போட்டி நீடிக்கிறது. ஆனால், நடிகர்களின் ரசிகர்கள்தான், இப்படி போட்டி போடுகிறார்களே தவிர, அந்த நடிகர்களுக்குள் அப்படி போட்டி எதுவும் இல்லை. அவர்கள், நல்ல நண்பர்களாகவே இருக்கின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு நல்ல உதாரணம்தான்.