/* */

ஷாலினி இருக்கவேண்டிய இடத்தில் இன்னொரு நடிகை! அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஷாலினி அஜித் வாழ்வில் வந்த பிறகு அஜித்குமாருக்கு அனைத்தும் வெற்றிகரமாக மாறியதால், அஜித் எப்போதும் ஷாலினியை தனது லக்கிசார்மாக நினைக்கிறார் என்கிறார்கள்.

HIGHLIGHTS

ஷாலினி இருக்கவேண்டிய இடத்தில் இன்னொரு நடிகை! அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி!
X

அஜித்குமாரின் மனைவி ஷாலினியும் நடிகை என்பது பலருக்கும் தெரிந்த விசயம்தான். ஆனால் தெரியாத விசயம் ஒன்று உள்ளது. அது ஷாலினியை திருமணம் செய்வதற்கு முன் அவர்களின் காதல் தொடங்குவதற்கு முன்னரே அஜித்குமார் இன்னொரு நடிகை மீது காதல் வசப்பட்டிருக்கிறாராம். அதுமட்டுமின்றி அவரைத் திருமணம் செய்ய நினைத்து வீட்டுக்கு சென்று பெண் கேட்டு வந்தாராம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் அஜித் மிகவும் தனித்துவமானவர். பொதுவாக எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார். யாரிடமும் அதிக நேரம் பேசமாட்டார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாலும் பெரிய அளவில் அவரை ரசிகர்கள் சந்தித்துவிட முடியாது அதை அவர் அனுமதிக்கவும் மாட்டார். ரசிக மன்றங்களைக் களைத்துவிட்டார். இப்பவும் குடும்பத்துக்காக அதிக நேரம் செலவிடும் ஒரு நடிகராக இருக்கிறார்.

அஜித்குமார், ஷாலினி ஜோடி தான் கோலிவுட்டின் பெஸ்ட் காதல் ஜோடி என்று பலரும் கருதும் அளவுக்கு அவ்வளவு மெனக்கெடுதல்களைக் குடும்பத்துக்காக செய்து வருகிறார். சினிமாவில் நடிப்பது போக மற்ற அனைத்து நேரங்களையும் குடும்பத்துக்காக செலவிடுகிறார். ஷாலினியை அவர் இப்போதும் காதலிப்பதால்தான் இப்படி இருக்க முடிகிறது என்று கூறுகின்றனர் ரசிகர்கள்.

அமர்க்களம் படத்தில் நடிக்கும்போது ஷாலினியைக் காதலித்து கரம்பிடித்தார் அஜித். அதற்கு முன்னதாக அஜித்குமார் வேறொரு நடிகையை காதலித்தாராம். அவர் வேறு யாருமில்லை. வான்மதி படத்தில் நடித்த சுவாதி என்பவர்தான் அந்த நடிகை.

விஜய்யுடன் தேவா, வசந்த வாசல், செல்வா உள்ளிட்ட படங்களில் நடித்த சுவாதி, அஜித்துடன் வான்மதி, உன்னைத் தேடி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அவரை அஜித்குமார் காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு சுவாதியின் அம்மா தடையாக இருந்தார் என்றும் கூறுகிறார்கள். சுவாதிக்கு தெரியாமல் அஜித்தை மிரட்டி தன் பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என்று தெரிவித்துவிட்டாராம். இதனால் வேறு வழியில்லாமல் அஜித் தன் மனதை மாற்றிக் கொண்டுவிட்டார் என்கிறார்கள். அதே நேரம் நடிகை ஹீரா என்பவர் அஜித்தை காதலிப்பதாக கூறி இவர் பின் சுற்றிக் கொண்டிருந்தாராம். ஆனால் அஜித் அவரையும் திரும்பி பார்க்கவில்லையாம். தான் ஆசைப்பட்ட ஒன்று கிடைக்கவேண்டும் என்றால் அதற்கு தனக்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டு படங்களில் நடித்தாராம். பின் ஷாலினி மீது ஏற்பட்ட காதலுக்கு பிறகு திருமணம் செய்துகொண்டார்களாம்.

ஷாலினி அஜித் வாழ்வில் வந்த பிறகு அஜித்குமாருக்கு அனைத்தும் வெற்றிகரமாக மாறியதால், அஜித் எப்போதும் ஷாலினியை தனது லக்கிசார்மாக நினைக்கிறார் என்கிறார்கள்.

Updated On: 31 May 2023 10:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  8. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  9. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!