இளம்வயதில் மறைந்த நடிகை ஆண்ட்ரிலா சர்மா
aindrila sharma death-24 வயது மட்டுமே ஆன இளம் நடிகை ஆண்ட்ரிலா சர்மா, திடீரென மரணமடைந்தது பெங்காலி சினிமா ரசிகர்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
HIGHLIGHTS
actress aindrila sharma passes away, aindrila sharma death- பெங்காலி நடிகையான ஆண்ட்ரிலா சர்மா, மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். அவர் Jiyon Kathi, Jibon Jyot, Jhumur உள்ளிட்ட பல முக்கிய சீரியல்களில் நடித்து இருக்கிறார். அவர் அதன் பின் வெப் சீரிஸில் நடிக்க தொடங்கி இருந்தார்.
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரிலா சர்மா புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
24 வயதான பிரபல பெங்காலி நடிகை ஆண்ட்ரிலா சர்மா, இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த 20 நாட்களாக, சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை தொடர்ந்து CPR கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் நடிகை ஆண்ட்ரிலா சர்மா தற்போது மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை ஆண்ட்ரிலா சர்மா, மரணமடைந்துள்ள இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஆண்ட்ரிலா சர்மாவுக்கு மூளைக்குள் இரத்தக்கசிவு இருப்பதாக டாக்டர்கள் கூறியதாக சொல்லப்பட்டது. இதனால் பக்கவாதம் ஏற்பட்டதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில்தான் 24 வயதில் நடிகை ஆண்ட்ரிலா சர்மா, மரணமடைந்த சம்பவம், திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
பொதுவாக, நடிகைகளின் இதுபோன்ற திடீர் மறைவு, திரையுலகம் சார்ந்தவர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிகமாக பாதிக்கவே செய்கிறது. ஒரு சில படங்கள், டிவி சீரியல்களில் நடித்தாலும் நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே, ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்து விடுகின்றனர், நல்ல கேரக்டர்களில், தங்களது திறமையை வெளிப்படுத்தி நடித்து, சிறந்த கலைத்திறமையையை உள்ளவர்கள் என்பதையும் நிரூபித்து விடுகின்றனர்.
எதிர்காலத்தில், முன்னணி நடிகையாக பல சிகரங்களை தொடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில், இப்படி திடீரென ஆபத்தான நோய்வாய்ப்பட்டோ அல்லது திடீர் விபத்துக்களிலோ, சொந்த பிரச்னைகளால் தற்கொலை செய்துகொண்டோ நடிகைகள் மறைந்து போவது, ரசிகர்களை பலத்த அதிர்ச்சியடைய வைக்கிறது.
தமிழ் சினிமா உலகில் சில்க் ஸ்மிதா, மோனல், வடிவேலு பட காமெடி நடிகை சித்ரா, நடிகை ராணி, சீரியல் நடிகை சித்ரா என, சிலரை குறிப்பிடலாம். அதுபோல், நடிகை சவுந்தர்யா, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் காதலா காதலா, விஜய்காந்துடன் சொக்கத்தங்கம், தவசி, சத்யராஜூடன் சேனாதிபதி, கார்த்தியுடன் பொன்னுமணி என முன்னணி நாயகியாக வந்த சவுந்தர்யா, தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க தனது சகோதரர்களுடன் ஹெலிகாப்டரில் பயணித்த போது, விபத்தில் சிக்கி உயிரிழந்தார். எனவே, கலைஞர்களின் மறைவை பொறுத்தவரை ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் சார்ந்திருந்த கலைத்துறைக்கே பேரிழப்புதான் என்றால் அது மிகையல்ல.