/* */

aga naga பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியானது!

கார்த்தி - திரிஷாவுக்கான காதல் பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியிருக்கிறார்.

HIGHLIGHTS

aga naga பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியானது!
X

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாடல்களை வெளியிடுவதற்கு முன்பாக ஒரு சிங்கிள் பாடலை வெளியிடப்படுகிறது என்கிற தகவல் வெளியானது. இந்நிலையில், இப்போது முதல் பாடலான அகநக பாடல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த பொன்னியின் செல்வன் படம் கடந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம், வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் படத்தின் புரமோசன் பணிகளைத் திட்டமிட்டு முடிப்பது, ஒரு மாத காலத்துக்கு முன்பே பயணங்களைத் திட்டமிடுவது என படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது முதல் அப்டேட்டாக பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

கார்த்தி - திரிஷாவுக்கான காதல் பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியிருக்கிறார்.

மார்ச் மாதம் 29ம் தேதி இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இந்நிகழ்வு வரும் ஏப்ரல் 5ம் தேதிக்கு மாற்றப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நடிகர்களுக்கும் ஷூட்டிங் மிக ஜோராக நடந்து வருகிறது.

கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பிலும், ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பிலும் இருக்கிறார்கள். மேலும் ஜெயம் ரவியும் தனது சைரன் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். கார்த்திக்கு ஜப்பான், விக்ரமுக்கு தங்கலான், திரிஷாவுக்கு லியோ என மிக பிஸியாக இருப்பதால் இவர்களை விழாவுக்கு அழைக்க திட்டமிட்டிருக்கும் தயாரிப்பு தரப்பு ஏப்ரல் 5ம் தேதிக்கு மாற்றியுள்ளது. அனைவரும் ஏப்ரல் மாதத்துக்குள் மற்ற படங்களிலிருந்து விடுபட்டு இந்த படத்துக்கான புரமோசன் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.


கொச்சி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மலேசியா, துபாய் உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும் இந்நகரங்கள் பட்டியலில் நியூயார்க், லண்டன் உள்ளிட்ட இன்னும் சில நகரங்களும் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. இம்முறை பொன்னியின் செல்வன் கொஞ்சம் பெரிய லெவலில் வெளியிடப்படவிருக்கிறது. இதற்காக பொன்னியின் செல்வன் நடிகர், நடிகைகளிடம் 19 நாட்கள் கால்ஷீட் வாங்கி வைத்திருக்கிறாராம் மணிரத்னம்.

Updated On: 20 March 2023 2:04 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  4. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  5. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  6. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  7. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  8. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  9. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  10. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...