கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா.. சோகமான பதிவு வைரல்
Actress Rambha Car Accident - நடிகை ரம்பா கார் விபத்தில் சிக்கியது குறித்து அவரின் பதிவு வைரலாக பரவி வருகிறது.
HIGHLIGHTS
Actress Rambha Car Accident - விஜலட்சுமி எனும் நடிகை ரம்பா திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின்னர் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோருடன் நடித்துள்ளார். 2010 இல், அவர் தனது தொழிலுக்கு விடைபெற்றார் மற்றும் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரனை மணந்தார்.
ரம்பா நடித்த முதல் படம் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற தெலுங்குப் படமாகும். மலையாளத்தில் அவருடைய முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். அதே ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான மற்றொருத் திரைப்படம் சம்பகுளம் தச்சன் ஆகும்.
தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது. அவருடைய ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைத்தனர்.
ரம்பா அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து த்ரீ ரோசஸ் என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தார். அத்திரைப்படத்தில் ரம்பாவுடன் இணைந்து ஜோதிகா மற்றும் லைலா ஆகியோர் நடித்தனர்.
ரம்பா நடித்த குயிக் கன் முருகன் என்ற திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என பல்மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் அவர் நடித்த மேங்கோ டாலி என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றார்.
தற்பொழுது கனடா நாட்டைச் சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்
அவர் ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார்.
actress rambha talks about car accident
இந்த நிலையில், கடந்த 1ம் தேதி, கனடாவில் நடிகை ரம்பா, தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லும் போது அவரது கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவரது மகள் சாஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், நடிகை ரம்பா தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீடு திரும்பும்போது கார் விபத்தில் படுகாயம் அடைந்த அவர், சேதமடைந்த காரின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் சோகமான பதிவை பகிர்ந்து கொண்டார். இதில், அவர்கள் அனைவரும் சிறிய காயங்களுடன் பாதுகாப்பாக இருப்பதாக அவர் வெளிப்படுத்தினார். எனினும், அவரது மகள் சாஷா மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது மகள் சாஷா விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு ரம்பா கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் வழியில் மற்றொரு கார் மோதியது! "Me with children and my nany" நாங்கள் அனைவரும் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம். என் குட்டி சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். மோசமான நாட்கள் கெட்ட நேரம். என தெரிவித்திருந்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2