/* */

கணவர் சுந்தர் சி யுடன் சண்டை போட்ட நடிகை குஷ்பு- ருசிகர தகவல்

Tamil Actress Kushboo -கணவர் சுந்தர் சியுடன் நடிகை குஷ்புசண்டை போட்டது ஏன் என்பது பற்றி ருசிகர தகவல் கிடைத்து உள்ளது.

HIGHLIGHTS

கணவர் சுந்தர் சி யுடன் சண்டை போட்ட நடிகை குஷ்பு- ருசிகர தகவல்
X

காபி வித் காதல் பட விழாவில் கணவர் சுந்தர் சி.யுடன் குஷ்பு

Tamil Actress Kushboo -காபி வித் காதல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகை குஷ்பு ஆவார். படத்தின் இயக்குனர் அவரது கணவர் சுந்தர் சி, நடிகர்கள் ஜெய், ஜீவா மற்றும் பாடகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். அந்த விழாவில் தனது கணவரை வானளாவ புகழ்ந்த குஷ்பு சண்டை போட்டது ஏன் என்பது பற்றியும் ருசிகர தகவலை வெளியிட்டார்.

அவர் பேச்சில் இருந்து ஒரு பகுதி ரசிகர்களுக்காக பகிரப்படுகிறது. இனி குஷ்பு அப்படி என்ன தான் பேசி விட்டார் என கேட்போமா?


எங்களது புரடக்‌ஷன் ஆரம்பிச்ச காலத்தில் இருந்து குடும்ப கதைகளை தான் முக்கிய இலக்காக கொண்டு எடுத்து இருக்கிறோம். எனது கணவர் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அவரை நம்பி படத்தில் முதலீடு செய்யலாம். ஏனென்றால் அவர் இயக்கும் படங்களில் நாம் போட்ட பணம் கட்டாயம் திரும்பி வந்து விடும். அந்த நம்பிக்னை எனக்கு அவர் மீது உண்டு. அந்த வகையில் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர் இல்லை என்றால் நான் இந்த மேடையில் நான் இல்லை என கூறலாம். அவர் தயாரிப்பாளர்கள் விரும்பும் நல்ல இயக்குனராக உள்ளார்.

Coffee With Kadhal, sundar c kushbooஒரு படத்தில் சுந்தர் சி சார் இயக்குனராக இருக்கிறார் என்றால் நிச்சயமாக தயாரிப்பாளர் அவரை நம்பி நம்பிக்கையுடன் வீட்டிற்கு சென்று நிம்மதியாக தூங்கலாம். ஏனென்றால் போட்ட காசு லாபத்தோடு திரும்ப வந்து விடும். அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது. இதனை அவர் எனது கணவர் என்பதற்காக கூறவில்லை.


இந்த படத்தின் மிகப்பெரிய பலம் ஏ.சி.எஸ். சார் மற்றும் அவரது புதல்வர் அருண் ஆவார்கள்.நான் என் கணவர் மீது நம்பிக்கை வைத்து இருப்பது போல் ஏ.சி.எஸ் .சாரும் அவர் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்.இசையமைப்பாளர் யுவன் பற்றி சொல்லவே வேண்டாம். எல்லோராலும் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக அவர் இருக்கிறார். யுவனும் சுந்தர் சி சாரும் நீண்ட காலத்திற்கு பின் இங்கு ஒன்றாக இணைந்து வந்திருக்கிறார்கள்.இந்த படத்தில் ஸ்டைலிஸ் ஆன மியுசிக், மனசுக்கு பிடித்த மியூசிக்கை யுவன் அமைத்திருக்கிறார்.


Coffee With Kadhal, sundar c kushbooஇது இன்று கேட்டிட்டு நாளைக்கு மறக்கிற மியூசிக் அல்ல. இந்த படத்தில் யுவனது மியூசிக் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த படத்தில் ஜெயம் ஜீவா இருக்கிறார்கள். இவர்கள் எங்கள் குடும்பத்தில் இருவராக இருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் யோகி பாபு கெமிஸ்ட்ரியும் இருக்கு.

இந்த படத்தின் சூட்டிங் ஊட்டியில் 38 நாட்கள் நடைபெற்றது. இந்த 38நாட்களும் எனது கணவர் ஒரு தடவை கூட நீ எப்ப வருவாய் என போன் பண்ணி என்னிடம் கேட்டது கிடையாது. ஏனென்றால் அவ்வளவு ஹேப்பியாக இருந்திருக்கிறார். பெண்டாட்டி ஆகிய என்னை பற்றிய நினைப்பே அவருக்கு வரவில்லை. நீ வர்றாயா என கேட்டது கூட இல்லை. மேரேஜ் அன்னிவர்சரிக்கு மூன்று நாள் நான் அங்கு வந்தே தீருவேன் என நான் போன் செய்த போது சரி சரி வர்றாயா வா வா என சொன்னார். அந்த அளவிற்கு சந்தோஷமாக இருந்திருக்கிறார்.

Coffee With Kadhal, sundar c kushbooநான் இல்லை என்றால் எனது வீட்டுக்காரரை நன்றாக கவனித்து பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பது அர்ச்சனா தான். அவருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பி.பி.சாரை (நடிகர் பிரதாப்போத்தன்) இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன். அவரை மிஸ் பண்ணறேன்.அவர் இந்த படத்தில் அழகான ஒரு பாத்திரத்தில் பாதிரியாராக நடித்து இருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இன்று நம்முடன் இல்லை. படம் பார்க்கும் போது தெரியும் அவர் எவ்வளவு அழகாக நடித்து இருக்கிறார் என்பது. பி.பி. நிச்சயமாக மேலே இருந்து இதனை பார்த்து ஸ்மைல் செய்வதோடு ஆசீர்வாதம் வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.


Coffee With Kadhal, sundar c kushbooசுந்தர் சி சார் 28 வருடமாக திரைத்துறையில் இருக்கிறார். நான் நடிக்க வந்து 20 வருடம் ஆகிறது. எங்களுக்கு மிகப்பெரிய சப்போர்ட் ஆக பேப்பர், மற்றும் எலக்ட்ரானிக் மீடியா இருந்திருக்கிறார்கள். அவர்கள் சப்போர்ட் இல்லை என்றால் நாங்கள் இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்க முடியாது.

Coffee With Kadhal, sundar c kushbooஇந்த விழாவிற்கு கடைசி நேரத்தில் அர்ச்சனாவை நான் அழைத்தேன் விழாவிற்கு வாங்க என்று. அவர் லேட்டாக வந்திருக்கிறார். அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படத்தில் எனது பாட்டு இருக்கிறது நான் இல்லை என்ற வருத்தம் இருக்கிறது. அதற்கு காரணம் எனது கணவர் இயக்குனர் சுந்தர் சி சார் தான்.

சாங் வைச்சிட்டு அதாவது ஐந்தாம் தேதி சாங் வைச்சிட்டு நான்காம் தேதி கூப்பிடுகிறார் சாங் எடுக்க போகிறேன் என்று. முன்னாடியே ஏன் சொல்லவில்லை என கேட்கிறேன். மேடைக்கு வாங்க பதில் சொல்லுங்க..

குஷ்பு இப்படி ஆவேசமாக பேசியதும் விழாவின் முன்னணி வரிசையில் இருந்த இயக்குனர் சுந்தர் சி மேடைக்கு வேகமாக வந்து மைக்கை கையில் வாங்கினார்.

அப்போது குஷ்பு நீங்க என்னை எப்ப கூட்டீங்க சொல்லுங்க பாப்போம் என்றார்.

Coffee With Kadhal, sundar c kushbooஇதற்கு பதில் அளிக்கும் வகையில் அவுங்க ஆடியோ ஏற்கனவே பார்த்திட்டாங்க அதனால் தான் கூப்பிடவில்லை. இருந்தாலும் நான் அவங்களை ஆட வைத்து சூட் செய்து மீடியா நண்பர்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என கூறியதும் குஷ்பு மகிழ்ச்சியாக மேடையில் ஆட ஆரம்பித்தார். தனது சுந்தர் சியை கட்டி தழுவி வாழ்த்து தெரிவித்தார்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Sep 2022 11:32 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...