படிக்கட்டில் தவறி விழுந்து பிரபல நடிகை பலி! திரையுலகில் அதிர்ச்சி!
மாடிப்படியில் தவறி விழந்து தலையில் அடி பட்டதால் மூளைச் சாவு அடைந்த பிரபல நடிகை பலி!
HIGHLIGHTS
சினிமாவில் தனது கனவுகளை நிறைவேற்றிக் கொண்டே வரும் வேளையில் முன்னணி நடிகையாக வலம் வரவேண்டிய நடிகை மாடிப் படிக்கட்டில் தவறி விழுந்து மூளைச் சாவு அடைந்து உயிரிழந்துள்ளார். இந்த செய்தி திரையுலகை மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல கொரிய நடிகை பார்க் சூ ரியன் மாடிப் படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடியிலிருந்து குதித்து பிழைத்தவர்களும் வாழும் இதே பூமியில் மாடிப் படியில் தடுக்கி விழுந்து இறந்துவிட்டார் என்கிற செய்தி கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தும்தானே.
ஸ்னோ டிராப் உள்ளிட்ட பல்வேறு கொரிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றிருந்தார் பார்க் சூரியன். இவருக்கு 29 வயதே ஆகின்றது. கடந்த ஜூன் 11ம் தேதி மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து தலையில் பலத்த அடி ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவருக்கு சுயநினைவு இழப்பு ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர்.
எவ்வளவோ சிகிச்சை அளித்தும் பலன் கிடைக்காததால் மூளைச் சாவு அடைந்துள்ள நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. பார்க்கின் பெற்றோர் தங்கள் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்யதாக அறிவித்து , அவளது இதயம் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது. அவரது உடல் உறுப்புகள் மிகவும் தேவைப்படும் ஒருவருக்கு போய் சேரட்டும். யாரோ ஒருவரிடம் துடிக்கிறது என்ற எண்ணத்தில் நாங்கள் நிம்மதியாக வாழ்வோம் என்று தெரிவித்துள்ளார்.