இன்னும் ரூ. 2 கோடியை தாண்டாத நடிகர் சத்யராஜ்
Actor Sathyaraj Salary - தமிழ் சினிமாவில் நடிக்க வந்து, 43 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதுதான் இரண்டு கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார் நடிகர் சத்யராஜ்.
HIGHLIGHTS
Actor Sathyaraj Salary - 1978ம் ஆண்டு வெளியான 'சட்டம் என் கையில்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் சத்யராஜ். துவக்கத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்தார். அதன்பின்பு 'டெரர்' வில்லனாக மாறி தமிழ் சினிமாவை கலக்கினார். பல படங்களில் வில்லனாக நடித்தார். ஒரு கட்டத்தில், தனது சொந்த ஊர்க்காரரான மணிவண்னனின் அறிமுகம் கிடைத்த பின், அவரின் சினிமா வாழ்க்கையே மாறி விட்டது.
இயக்குநர் மணிவண்னன் இயக்கிய, '100வது நாள்' படத்தில் சத்யராஜின் மொட்டை தலை கெட்டப் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன் அந்த கெட்டப்பிலேயே சில படங்களில் நடித்தார். பின்னர் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். மணிவண்னன் இயக்கத்தில் அவர் நடித்த 'கடமை, கண்ணியம் கட்டுப்பாடு' உள்ளிட்டl பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. குறிப்பாக 'அமைதிப்படை' படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து, டிரெண்ட் செட்டாக மாறியது. பாரதிராஜா இயக்கிய 'கடலோர கவிதைகள்' படத்தில், ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டார். அதேபோல், பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடித்த, வால்டர் வெற்றிவேல், ரிக்ஷா மாமா, நடிகன் உள்ளிட்ட படங்கள் அவரை, முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாற்றியது.
காலம் செல்ல செல்ல வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க துவங்கினார் சத்யராஜ். 'பாகுபலி' படத்தில் அவரின் 'கட்டப்பா' கேரக்டர் பட்டி தொட்டியெங்கும் அவரை மீண்டும் பிரபலப்படுத்தியது. தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கிலும் 'அப்பா' கேரக்டர்களில் அவர் கலக்கி வருகிறார்.
இந்நிலையில், சத்யராஜ் நடித்த முதல் படமான 'சட்டம் என் கையில்' வெளியாகி, சரியாக 43 ஆண்டுகள் ஆகிறது. அந்த படம் 1978ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி வெளியானது. எனவே, அவரின் மகன் சிபிராஜ் இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்து, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களும் சத்யராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதே கதாபாத்திரமாக திரையில் வாழ்பவர் நடிகர் சத்யராஜ். அதிலும் குறிப்பாக வில்லன் கதாபாத்திரம் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு வெறித்தனமாக நடிப்பார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் இன்றும் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்படுகிறது.
சமீபத்தில், இவர் நடித்துள்ள 'லவ் டுடே' படம், ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் சத்யராஜ் தான் நடிக்கும் படங்களுக்கு ரூ. 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'பிரின்ஸ்' படத்திற்கு ரூ. 2 கோடிதான் சம்பளமாக வாங்கிருந்தாராம் சத்யராஜ்.
நடிக்க வந்து 43 ஆண்டுகளான நிலையில், சம்பளமாக இப்போதுதான் 2 கோடி ரூபாயை தொட்டிருக்கிறார் சத்யராஜ். ஆனால், தனுஷ், நயன்தாரா போன்றவர்கள் கூட, ஒரு படத்துக்கு 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்கள். சில முன்னணி காமெடி நடிகர்கள் கூட, கோடிகளில்தான் சம்பளம் பெறுகிறார்களாம். ஆனால், 43 ஆண்டுகளாக சிறப்பான நடிப்பு திறனை வெளிப்படுத்தி வரும் சத்யராஜ் இன்னும் 2 கோடி ரூபாயை கூட கடக்கவில்லை என்பது, சற்று முரண்பட்ட விஷயம்தான்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2