/* */

நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Nayanthara Twins Baby Name -வாடகை தாய் மூலம் குழந்தை விவகாரத்தில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

HIGHLIGHTS

நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
X

விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா.

Nayanthara Twins Baby Name -நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் காதலும் திருமணமும் சமூக வலைத்தளங்கள் எங்கும் பரபர பேசுபொருளானதைப் போலவே, தற்போது, அவர்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்த செய்தியும் வாழ்த்தும் விமர்சனமுமாகப் பரபரவென பற்றிச் சுழல்கிறது. நேற்று(09/10/2022) மாலை 6:30 மணிக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்'' என்று பதிவிட்டிருந்தார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனின் பதிவுக்கு அவரது ரசிகர்களும் நயன்தாராவின் ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் பின்னூட்டத்தில் வாழ்த்துகளைப் பதிவு செய்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாட்டத்தோடு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், நடிகை நயன்தாரா, ஜூனியர் என்.டி.ஆருடன் இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான 'அதர்ஸ்' என்ற திரைப்படத்தில் வரும் காட்சியில், ஜோதிடராக வரும் ஜூனியர் என்.டி.ஆர்., நயன்தாராவைப் பார்த்து, 'கவலைப்படாதே உனக்கு இரட்டைக் குழந்தைதான் பிறக்கும்' என்று ஆரூடம் கூறியிருப்பார். தற்போது நயனுக்கு இரட்டைக் குழந்தைப் பிறந்திருக்கும் தருணத்தில் அந்தப் படக் காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தாங்கள் திட்டமிட்டபடி கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னை, மகாபலிபுரத்தில் உள்ள பிரமாண்ட ரிசார்ட்டில் தங்களது திருமணத்தை மிகவும் கோலாகலமாக நடத்தினர். இத்திருமணத்துக்கு வந்த பிரபலங்கள் அனைவரும் திருமண ஏற்பாட்டாளர்கள் விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

'நானும் ரௌடிதான்' படத்தில் நயன்தாரா நடித்தபோதுதான் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயனுக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டது. இதையடுத்து 6 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். இதனையடுத்துதான், கடந்த ஜூன் மாதம் தடபுடலான திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பிறகு, திருப்பதி கோயிலில் வெங்கடேச பெருமாள் தரிசனம், அதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு என அடுத்தடுத்த நிகழ்வுகளை திட்டமிட்டு முடித்துக் கொண்டு இருவரும் இதையடுத்து, தாய்லாந்து , பிரான்ஸ் என்று இரண்டு முறை ஹனிமூனைக் கொண்டாடிய பின்னர், திரையுலக ரசிகர்களோ, பிரபலங்களோ யாரும் எதிர்பார்க்காத நிலையில், தாங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டோம் என்று, விக்னேஷ் சிவனின் பதிந்த அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பதிவு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அப்பதிவில், நமது வேண்டுதல்களும், முன்னோர்களின் ஆசீர்வாதங்களும் உள்பட அனைத்தும் இணைந்து, எமக்கு இரண்டு குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும் என பதிவிட்டு இரண்டு குழந்தைகளின் பாதத்தை கையில் பிடித்திருக்கும் போட்டோவைப் பகிர்ந்து இருந்தார். திருமணமான நான்கே மாதத்திற்குள் வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுக்கொள்ள என்ன காரணம் என ஒருபுறம் ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து விமர்சனமான கேள்விகளும் எழுந்துள்ளன. நயன் விக்கியின் திருமணம் ஜூன் 9-ல் நடந்த நிலையில், அக்டோபர் 9-ல் குழந்தைகள் பிறந்துள்ளதென அவர்களது அறிவிப்பும் குறிப்பிடத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பதற்கு என மருத்துவ துறை சார்பில் நிறைய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த விதிமுறைகள் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடியினர் பின்பற்றி உள்ளார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக இன்று தமிழக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது ஒரு செய்தியாளர் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் குழந்தைகள் இல்லாத சூழல் இருந்தால் மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க முடியும் என விதிமுறை இருப்பதால், திருமணமான நான்கே மாதங்களில் நயன்தாரா குழந்தை பெற்றெடுத்து இருப்பது விதிமுறை மீறல் ஆகாதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மா. சுப்பிரமணியன் இதுபற்றி தமிழக அரசின் டி.எம்.எஸ். துறை விசாரணை நடத்தும். இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும். அந்த விளக்கத்தின் அடிப்படையில் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 Oct 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்