அமிதாப் எதில் திவாலானார்..? கைகொடுத்த நண்பர் அன்ஜன் ஸ்ரீவஸ்தவ் என்ன சொல்கிறார்..? படிங்க..!
ABCL வங்கி திவாலான நேரத்தில் அமிதாப் பச்சனுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதையும், அந்த காலகட்டத்தில் அமிதாப் பக்கம் நின்றதையும் அன்ஜன் ஸ்ரீவஸ்தவ் பகிர்ந்துள்ளார்.
HIGHLIGHTS
Aanjjan Srivastav recalls how Amitabh Bachchan had gone bankrupt in Tamil, Aanjjan Srivastav recalls friendship with Amitabh Bachchan, Aanjjan Srivastav recalls how Amitabh Bachchan had gone bankrupt before Kaun Banega Crorepati,
அமிதாப் பச்சன் எப்படி கான் பனேகா க்ரோர்பதிக்கு முன் திவாலாகி இருந்தார் என்பதை நினைவுபடுத்துகிறார் அன்ஜன் ஸ்ரீவஸ்தவ். அந்த நேரத்தில், அமித்ஜி கைகளை கூப்பி, 'உங்கள் பணத்தை விரைவில் திருப்பித் தந்துவிடுவேன்' என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'வாக்லே கி துனியா'வின் அன்ஜன் ஸ்ரீவஸ்தவ் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் 90களில் வலுவான நட்பில் இருந்தனர். ஷாஹென்ஷா பட நாட்களில் அவர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட நட்பு தொடங்கியது. அன்ஜன் தனது வங்கி குறித்து அமிதாப் பச்சனுக்கு அறிமுகப்படுத்தி, அவர் பணிபுரியும் வங்கியில் தனது வங்கிக் கணக்கைத் தொடங்க வைத்தார். பிக் பி தனது கடினமான நேரத்தில் அன்ஜன் உடன் இருந்தார். இருப்பினும் கவுன் பனேகா க்ரோர்பதிக்குப் பிறகு அமிதாப்ஜிக்கு விஷயங்கள் மோசமாக மாறியது. அது குறித்து அன்ஜன் பகிர்ந்து கொண்டார்.
இதோ அவர் பகிர்ந்த தகவல் :
அமித்ஜி ஒரு மோசமான நிலைகுத் தள்ளப்பட்டிருந்தார். அந்த நாட்களில் அவருக்கு எதிராக ஒரு பெரிய புரட்சியே நடந்தது. அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள டூஃபான் படப்பிடிப்பு தளத்தில் ஃபிலிமிஸ்தான் சென்றேன். அந்த நாட்களில், கொல்கத்தாவில், அமித்ஜிக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது. அவருக்கு எதிராக சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு நிலைமை மோசமாகி இருந்தது.
அமித்ஜி மிகவும் சோகமாக இருந்தார். நான் அங்கு சென்று அவரிடம், ‘பைசாஹப் கைசே ஹை?’ (தம்பி, எப்படி இருக்கிறீர்கள்?) என்று கேட்டேன், அவர் “தீக் ஹன்” (நான் நன்றாக இருக்கிறேன்) என்றார்.
அவரை சமாதானம் செய்ய அங்கு யாரும் இல்லை. அலகாபாத்தின் இலக்கியவாதிகள் அவரை மிக மோசமாக விமர்சிக்கத் தொடங்கியதையும் நாம் அறிவோம். அவரது தந்தையின் நண்பர்கள் எதைப்பற்றியும் தெரிந்துகொள்ளாமல் அவரைப் பற்றி தவறாகப் பேசத் தொடங்கினர்.
அதனால் அவர் முகம் சோர்வடைந்து, கவலை தோய்ந்த முகத்துடன் மோசமான நிலையில் இருந்தார். அவர் ஒரு விபத்தை சந்தித்துள்ளார் என்பதை என்னால் உணர முடிந்தது. அந்த விபத்தில் ஏற்பட்ட காயங்களில் இருந்து அவர் மீண்டு வரவேண்டும். அதனால் நான் அவருக்காக தவறாமல் நின்றேன். என்னைப் பொறுத்தவரை அமித்ஜி ஒரு நல்ல மனிதர்.
தவறான பேங்க் ஸ்டேட்மென்ட் காரணமாக அமிதாப்பச்சன் சிக்கினார்
ஏபிசிஎல்-ல் கணக்கு இருந்தபோது, அதில் அமித் ஜி சிக்கினார். ஸ்டேட்மென்ட் எடுக்க வங்கியில் இருந்து அவருடைய அலுவலகத்திற்குச் செல்வது வழக்கம். அந்த சமயங்களில் மக்கள் அவரை மோசமாகப் பேசினர். இதைத்தான் நானும் என் மேலாளரும் உணர்ந்தோம். அவர் நிரபராதி என்பதால் இந்த விவகாரத்தில் இழுத்தடிக்கப்பட்ட அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று மேலாளர்களிடம் கேட்டுக் கொண்டேன்.
நாங்கள் அவரைச் சந்தித்தபோது, அவர் உடனடியாக கூப்பிய கைகளுடன் எழுந்தார். ‘உங்கள் பணத்தை விரைவில் திருப்பித் தந்துவிடுவேன்’ என்றார். நான் அவரிடம் ‘நாங்கள் அதற்காக வரவில்லை. உங்கள் கணக்காளரின் தவறுகளை உங்களுக்கு அறியத் தருவதற்காக நாங்கள் வந்துள்ளோம். உங்களால் முடிந்தவரை பணத்தைத் திருப்பித் தருகிறீர்கள். மீதியையும் நீங்கள் தருவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். உங்கள் எண்ணம் சரியானது.
ஆனால் இந்த மாதிரியான நேரங்களில் மற்ற வங்கிகளுடன் பரிவர்த்தனை செய்யாதீர்கள்.’ என்று கேட்டுக்கொண்டேன். நான் மீண்டும் வங்கிக்கு வந்து, அவர் மீது வழக்கு எதுவும் தாக்கல் செய்ய வேண்டாம் என்று அவர்களிடம் சொன்னேன். மெதுவாக எல்லா பணத்தையும் திருப்பி கொடுத்தார்.
அமிதாப் பச்சன் திவாலாகிவிட்டார்
அமிதாப் பச்சன் திவாலாகிவிட்டார். அவருடைய நிறுவனமான ஏபிசிஎல் அவர்களால் அடைய முடியாத அளவுக்கு பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இருப்பினும், அவர் கவுன் பனேகா க்ரோர்பதியில் மீண்டும் களமிறங்கினார். என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது மட்டுமல்ல அதிர்ச்சியடையவும் வைத்த சம்பவம் என்னவென்றால், அவர் தனது பழைய நண்பர்கள் அனைவருடனான உறவைத் துண்டித்துவிட்டார். கேபிசியில் சேர்ந்த பிறகுதான் இந்த மாற்றம் வந்தது.
அமிதாப் மற்றும் அன்ஜனின் உறவில் ஏற்பட்ட பிளவு
கேபிசிக்குப் பிறகு அமித் ஜிக்கும் எனக்குமான உறவிலும் பிளவு ஏற்பட்டுவிட்டது. முன்பு ஜெயாஜி என்னை ஹோலி கொண்டாட்டங்களுக்கு என் குடும்பத்துடன் அழைப்பு விடுப்பார். ஆனால் மெல்ல மெல்ல அழைப்புகள் காணாமல் போனதால், தொடர்பு முற்றிலும் மறைந்துவிட்டது. இது என் தொழிலை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஆனால் அது என் மனதைக் காயப்படுத்திவிட்டது. எங்கோ எனக்கு எதிராக அமித்ஜியைத் தூண்டிய சில நாடக நண்பர்களின் தவறுகளும் அதில் அடங்கும்.
அவரை ஆறுதல்படுத்த யாரும் இல்லாத தருணங்களில் நான் அவருக்காக தோள்கொடுத்து நின்றேன். அது அமிதாப் ஜி மனதில் இன்னும் இருக்கும் என்று நம்புகிறேன் என்று மனம் நெகிழ்கிறார்.