இந்தியா முழுவதும் ஒரேநாளில் 12,847 பேருக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்
இந்தியா முழுவதும் ஒரேநாளில் 12,847 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
HIGHLIGHTS
நாடு முழுவதும் கொரோனா தொற்று அன்றாடமும் உயர்ந்து வருகிறது. அதன்படி, நேற்று முன் தினம் 8,822, நேற்று 12,213 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 12,847 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,32,57,730 லிருந்து 4,32,70,577 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரே நாளில் 7,985 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,74,712 லிருந்து 4,26,82,697 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5,24,817 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 58,215 லிருந்து 63,063 ஆனது. இந்தியாவில் இதுவரை 195.84 கோடி பேருக்கு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 15,27, 365 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான, புள்ளி விவர தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.